'தண்ணீர் பாட்டிலை வீசி என்னை விரட்டினர்'
தேனி மாவட்டம் போடி தொகுதியில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின் அவர் அளித்த பேட்டி:
முன்னாள் முதல்வர் பழனிசாமி, பதவிக்கு வந்தது தவறான வழி. நன்றி உணர்வு இல்லாத மனிதர் தான், அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக உள்ளார். அவர் பதவிக்கு வந்த காலத்தில் இருந்து இன்று வரை தோல்விகளையே சந்தித்துள்ளார்; இனி வரும் காலங்களிலும் படுதோல்விகளையே சந்திப்பார்.
அ.தி.மு.க.,வில் இருந்து நானாக விலகவில்லை. அவர்கள் தான் என்னை விரட்டினர். முன்னாள் அமைச்சர்கள் உதயகுமாரும், சீனிவாசனும்தான் அதற்கு காரணம். தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்து, என்னை வெளியேற்றியவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் தான் என்னை தி.மு.க.,விற்கு விரட்டினர். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (9)
Arul Narayanan - Hyderabad,இந்தியா
07 ஏப்,2026 - 13:52 Report Abuse
அவர்கள் உங்களை திமுகவிற்கா விரட்டினார்கள்? நீங்கள் பாஜக பக்கம் தானே ஒதுங்கினீர்கள்? அங்கேயாவது சேர்ந்து இருக்க வேண்டும். அல்லது தனிக் கட்சி ஆரம்பித்தாவது கூட்டணியில் இணைந்து இருக்க வேண்டும். ஆனால் கட்சி ஆரம்பித்து செலவு செய்ய மனம் இல்லாமல் அதையும் செய்யவில்லையோ? நல்ல வேளையாக போடிநாயக்கனூரில் உங்களை எதிர்க்க சரியான ஆளை பழனிச்சாமி நிறுத்தாமல் உங்களுக்கு உபகாரம் செய்து விட்டார். அந்த தொகுதி மக்களாவது உங்களுக்கு சரியான பாடம் புகட்டட்டும். 0
0
Reply
Rajan A - ,இந்தியா
07 ஏப்,2026 - 13:15 Report Abuse
பின்னே பன்னீர் பாட்டில் எடுத்தா வீசுவாங்க? 0
0
Reply
RAVINDRAN.G - CHENNAI,இந்தியா
07 ஏப்,2026 - 10:56 Report Abuse
உங்களை மாதிரி நன்றி மறந்த பிறவியை நாங்கள் பார்த்ததே இல்லை பன்னீர்செல்வம். உங்களை முதலமைச்சர் லெவலுக்கு அழகு பார்த்த கட்சியை அதன்பிறகு ஒருங்கிணைப்பாளர் என்று கட்சியின் முதல் பதவியை வழங்கியவர் பழனிச்சாமி அவர்கள். அவர் துணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார் ஆட்சியை கவனித்துக்கொண்டார். உங்களுக்கு கட்சி உயர் பதவியை வழங்கினார். கட்சி இருந்தால்தானே ஆட்சியை பிடிக்கமுடியும். அந்த வகையில் உங்களுக்கு உரிய மரியாதையை கொடுத்து அனைத்து தொண்டர்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர். நீங்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து அதிமுக கட்சிக்கு எதிராக திமுகவுடன் சேர்ந்து வாக்களித்ததை தொண்டர்களும் மக்களும் இன்னும் மறக்கவில்லை. உங்களைப்போன்ற நன்றி மறந்தவர்களை மக்கள் எப்போதும் புறக்கணிப்பார்கள். நீங்கள் தோல்வி அடைவது உறுதி.அதிமுகவில் முதன்மை இடத்தில இருந்த நீங்கள் இப்போது திமுகவின் ஒரு சாதாரண எம் எல் ஏ பதவிக்கு போட்டி இடுவது உங்களுக்கே அவமானமா தெரியவில்லையா? இன்னும் என்ன சாதிக்க வேண்டி இருக்குது உங்கள் வாழ்க்கையில்? யாருக்காக வாழப்போறீங்க? ஏற்கெனவே சேர்த்த சொத்து பதவில்லையா? 0
0
Rajan A - ,இந்தியா
07 ஏப்,2026 - 13:19Report Abuse
அதை விட கட்சி அலுவலகத்தில் நடத்திய ரகளையை யாரும் மறக்க மாட்டார்கள். கடைசியில் எம்ஜிஆரின் பரம விரோதி கட்சியில் ஐக்கியமானது கேவலம். அதுவும் தாய் கழகமாம், ஆசையால் மறைந்து போனவர் 0
0
Arul Narayanan - Hyderabad,இந்தியா
07 ஏப்,2026 - 22:53Report Abuse
பன்னீர்செல்வம் ஆதரிக்காவிட்டால் அடுத்த நான்கரை ஆண்டுகள் நிம்மதியாக ஆள முடியாது என்று தெரிந்து தான் நல்லவர் வேஷம் போட்டு நம்ப வைத்தார். ஆட்சி முடிந்ததும் அவரை கட்சியில் இருந்து நீக்க முடிந்த அளவு முயற்சி செய்து அவரையும் கணிசமான அளவு கட்சியினரையும் விரட்டியே விட்டார். இப்போது கூட்டணி பலத்தால் கரையேறும் வாய்ப்பு கிடைத்தாலும் கூட்டணியை கட்டமைத்து கொடுத்த பாஜகவையும் ஒழித்து கட்டும் வேலையை செவ்வனே ஆரம்பித்து விட்டார். இவரைப் போன்ற யோக்கிய சிகாமணி உலகெங்கும் தேடியும் கிடைக்க மாட்டார் என்று நீங்கள் கருதுவது நகைப்பிற்கு உரியது. 0
0
Reply
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
07 ஏப்,2026 - 10:12 Report Abuse
அதிமுகவிலிருந்து விலகியபின் திமுகவில் சேராமல் அமமுபோல் தனிக்கட்சி தொடங்கியிருக்கலாம்... 0
0
Reply
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
07 ஏப்,2026 - 09:57 Report Abuse
இப்போதும் விரட்டி அடிக்க வேண்டும். யாரும் இவருக்கு ஓட்டு போடக்கூடாது 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
07 ஏப்,2026 - 08:45 Report Abuse
அவர்கள் வீசியது தண்ணீர் பாட்டிலா இல்லை சாராய தண்ணீர் பாட்டிலா என்று நீயா நானா வாக்குவாதம் செய்ய தயாரா 0
0
Reply
renga rajan - ,இந்தியா
07 ஏப்,2026 - 08:19 Report Abuse
அதற்காக கேவலம் அம்மா அடித்து உதைத்த கட்சியில் சேரவேண்டுமா? அரசியலில் இருந்தது ஓய்வு பெற்றிருக்கலாம். டிரைவருக்கு இருந்த தன்மானம் முதலாளிக்கு இல்லை. 0
0
Reply
மேலும்
-
கடும் குடிநீர் தட்டுப்பாடு லாரிகளில் விநியோகிக்க கோரிக்கை
-
அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி; பிரேமலதா நம்பிக்கை
-
கஸ்டம்ஸ் சாலை விரிவுபடுத்தப்படும் ;அ.தி.மு.க.வேட்பாளர் உறுதி
-
அமைச்சர் கணேசன் ஓட்டு சேகரிப்பு
-
தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதாவிடம் தரும் கேள்விகள்
-
பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து ;கல்லுாரி மாணவர் கால் அகற்றம்
Advertisement
Advertisement