சீமான் பேச்சுகள் வெறும் ‛‛சவடாலா'' இல்லை ‛‛சவாலா'': அதிர்ச்சியில் ‛‛அன்பு தம்பிகள்''
நமது சிறப்பு நிருபர்
தேர்தல் என்றாலே சில அரசியல் தலைவர்கள் வாய்க்கு வந்ததை ‛‛அடிச்சு'' விடுவதும், செய்ய முடியுமா முடியாதா என யோசிக்காமல் உளறுவதும், மக்களை ஒன்றும் தெரியாத ‛‛கூமுட்டைகள்'' என நினைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு பேசுவதும் வழக்கம் தான். சில தலைவர்கள் சில நேரங்களில் ரொம்ப‛‛லாஜிக்''காக பேசுவார்கள். சில நேரங்களில் ரொம்ப ‛‛அபத்தமாக'' பேசுவார்கள். இதில் நாம் தமிழர் சீமான் முக்கியமானவர்.
சீமானின் கட்சி தேர்தல் அறிக்கையில், இப்படியான கவர்ச்சியான இலவச வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை. அதற்கு மாற்றாக தூய குடிநீர் இலவசம் போன்ற அறிவிப்பே இடம்பெற்றன. ‛‛பரவாயில்லையே, கொஞ்சம் லாஜிக்காக இருக்கிறாரே'' என்று நினைத்தால் அந்த சந்தோஷம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை.தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசும்போது அவர் கூறும் வாக்குறுதிகள், ‛‛லாஜிக்''கை அடித்து நொறுக்குகின்றன. இதோ அவற்றில் சில:
* சென்சாரில் கட் செய்வது போல, சினிமா பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் ‛‛கட்'' செய்யப்படும்.
* படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும் அரசு வேலை.
* மாடு மேய்க்க ஹெலிகாப்டர் தருவேன், குதிரை மேய்க்க ஜீப் தருவேன்.
* ஆடு, மாடு, தேனீ, கழுதை மற்றும் பன்றி வளர்ப்பை அரசு வேலையாக அறிவிப்பேன்.
* ஓட்டளிப்பவர்களுக்கு நன்கொடை ரசீது போல சான்றிதழ் வழங்க வலியுறுத்துவேன்.
இப்படி சீமானின் 'வாக்குறுதி வார்த்தைகள்' வந்துவிழும் நிலையில், தேர்தல் முடியும் வரை இன்னும் என்னென்னவெல்லாம் கேட்க வேண்டி இருக்குமோ என்ற அதிர்ச்சியில் மக்கள் காத்திருக்கின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் இதுபோன்ற தேர்தல் அறிவிப்புகள் எல்லாம் சாத்தியப்படுத்த முடியுமா என்று கேட்டால், 'சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியப்படுத்துபவன் தான் புரட்சியாளன்' என்கிறார் சீமான். 2010ல் கட்சி ஆரம்பித்து இதுவரை ஒரு எம்எல்ஏ கூட வெற்றிப்பெறாத நிலையில், இனிமேலும் ஜெயிப்பாரா என்ற தெரியாத நிலையில், ‛‛போகிற போக்கில் சும்மா அடிச்சு விடுவோம்'' என்று சீமான் பேசுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது நாம் தமிழர் அன்பு தம்பிகளுக்கு.
பேசாமல் உதய அண்ணனுடன் ஓத்துப்போயிருங்க அது நல்ல முடிவு கிட்டும் நிறைய சினிம்மா டைரெக்ஷன் சான்ஸே உடன் எதிர் பார்பததற்கு மேலா வெயிட்டா கிடைய்க்கும். தேர்தல் நெருஙகும் போனது சைமனுக்கு சுக்கிர திசைய்ய அடிக்க போகுது.
சீமானைசுற்றி வாலிப பட்டாளம் வானம்பாடிகள் வட்டமிடுகிறது.இந்தத் தரணிகேற்ற தங்கநிகர் வார்த்தைகள்
சீமான் பேச்சு வேற்று பேச்சு என்று சொல்லுபவர்கள் .....அய்யா ஸ்டாலினும், எடபடியாரும், துணைமுதல்வரும் மாறி மாறி வசைபாடி கொள்வதை நாகரீகமற்ற மக்களுக்கு பயன் இல்லாத பேச்சு என்று ஏன் செய்தி வெளியிடுவது இல்லை ??....
எதுவாக இருந்தாலும் ஒருமுறை வாய்ப்பு கொடுத்தால்தான் தெரியும் ,ஆனால் ஒன்று அடுத்த தலைமுறைக்காகவும்,மற்ற உயிர்களுக்காகவும் பேசுகிறவர் சீமான் மட்டும்தான்
இன்னுமா நீங்க முழிச்சிக்கல . உங்கள சொல்லி என்ன செய்ய..
நாம் தமிழர் கட்சி தேர்தலில் நின்று வெற்றி பெறுவதற்கு
இவர் இல்லை வாக்குகளை பிரித்து தீயவர்களை மீண்டு மீண்டும் ஆட்சியில் அமர வைப்பதின் மூலமாக இவரின் குடும்ப செழிப்பாக வளர
பணம் சம்பாதிக்க தொடங்கபட்ட கட்சியே "நாம் தமிழர் கட்சி".
தேர்தல் நேரத்தில் இதுபோல் செய்திகளை வெளியிட்டு திசைதிருப்புவது ஊடகங்களின் வேலை ...... முடியுமா முடியாதா ?? ...தேவையா தேவை இல்லையா என்பதை தமிழர்கள் சிந்திப்பார்கள் .....
நடப்பு பொருளாதாரம் பற்றி அறிவு ஸிரோ.
கண்டிப்பா தண்ணீர் தரவில்லை ,NLC இல் இருந்து செல்லும் மின்சாரம் நிறுத்துவேன் , நடக்கிற காரியமா இது இப்படி எல்லாம் மக்களை தற்குறிகளை வேலை வெட்டி இல்லாத APPARENTICE கலை குஷி படுத்தி திரள் நிதி வசூலித்து வாழ்பர்
காமராஜர் ஆட்சியில் மின்சாரம் தருகிறோம் தண்ணீர் தடையில்லாமல் தாருங்கள் என்று நேரு மூலமாக கர்நாடக முதல்வரிடம் பேசபட்டது ..... மடியில் கணம் இல்லாதவனுக்கு பயம் இருக்காது
இலவசமும் ஊழலும் சாத்தியம் ஆனால் தூய குடிநீரும் தற்சார்பு பொருளாதாரமும் சாத்தியம் இல்லை...என்னடா உங்க லாஜிக்? மாற்றம் என்பது சாத்தியதியால் பிறப்பது அல்ல...மாற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து பிறக்கிறது...
இவர் ஆட்சிக்கட்டிலில் அமரமாட்டார் என்று இவருக்கே நன்றாக தெரியும். அப்படி இருந்தும் தேவையில்லாமல் தனியாக நிற்கிறேன் என்று கூறி தன்னை நம்பிவந்த தொண்டர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.
சீமானும் விஜயும் கூட்டணி வைத்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். ஊழல் கட்சிகளான திமுக அதிமுகவை மக்கள் மாற்ற நினைக்கிறார்கள்.
unmaiமேலும்
-
உளுந்துார்பேட்டையில் வேளாண் கல்லுாரி :அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு உறுதி
-
ராமநாதபுரம் எம்.எல்.ஏ., க்களின் சொத்து மதிப்பு இருமடங்கு உயர்வு
-
கள்ளக்குறிச்சி தொகுதியை மீட்டெக்க வேண்டும்: தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
-
ரிஷிவந்தியத்தில் அரசு பொறியியல் கல்லுாரி: வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் வாக்குறுதி
-
பழனிசாமி முதல்வராவது உறுதி: சொரத்துார் ராஜேந்திரன் நம்பிக்கை
-
வி.சி., கட்சி வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு