செல்வ விநாயகர் கோவிலில் மகா பெரியவா அனுஷ பூஜை
உடுமலை: உடுமலை ஜி.டி.வி., லே-அவுட் செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில், பங்குனி மாத காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை நடந்தது.
மாதந்தோறும் அனுஷ நட்சத்திரத்தன்று, காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை உடுமலையில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், பங்குனி மாத அனுஷ நட்சத்திர பூஜை உடுமலை ஜி.டி.வி., லே - அவுட் செல்வவிநாயகர் கோவில் வளாகத்தில் நடந்தது.
விக்னேச்வர பூஜையுடன் துவங்கி, ஸங்கல்பம், அனுஷ பிரதான பூஜை, மகா பெரியவர் அஷ்டோத்திர அர்ச்சனை நடந்தது.
மேலும், வேத பாராயணம், காஞ்சி மட ஸ்வஸ்தி வசனம், சிவபுராணம், திருத்தொண்டர் தொகை, கோளறு திருப்பதிகம், பஞ்சபுராணம், திருப்புகழ் உள்ளிட்ட பாராயணங்கள் நடந்தது. தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.
உடுமலை சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரு ரன்னில் குஜராத் வெற்றி: கடைசி பந்து வரை 'டென்ஷன்'
-
குஜராத் மக்களிடம் மன்னிப்பு கேட்டார் கார்கே
-
கச்சா எண்ணெய் விலை 15 சதவீதம்... சரிந்தது! போர் நிறுத்த அறிவிப்பால் திடீர் மாற்றம்
-
சாதித்தது என்ன?
-
போர் நிறுத்த முடிவுக்கு சம்மதம் ஆனால் லெபனானை தாக்குவோம் :இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
இஸ்ரேல் பிரதமருக்கு உள்நாட்டில் எதிர்ப்பு
Advertisement
Advertisement