தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு

பந்தலுார்: பந்தலுார் அருகே அத்திக்குன்னா எஸ்டேட் தொழிலாளர்கள் மத்தியில், வருவாய் துறை சார்பில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பந்தலுார் அருகே அத்திக்குன்னா எஸ்டேட் பகுதியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வி.ஏ.ஓ. செபீர் வரவேற்றார். தாசில்தார் துரைசாமி பேசுகையில், ''பரிசு பொருட்கள் பணம் போன்றவற்றை வாங்காமல், வாக்காளர்கள் தங்களுக்கு பிடித்தமான வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவது அவசியம்,'' என்றார். தொடர்ந்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கிராம உதவியாளர் குமார், மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Advertisement