35 வயது நபர் கொலை:65 வயது நபருக்கு 'காப்பு'
குருகிராம்:குருகிராமில், விவசாய நிலம் தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, 35 வயது நபரை கொன்றதாக, 65 வயது நபர் போலீசில் சிக்கியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகர் என்ற இடத்தை சேர்ந்த கேம்சந்த் என்பவர், ராகுல் குமார் என்பவரை தாக்கி கொன்றதாக கூறப்படுகிறது. அரிவாளால் ராகுல்குமாரின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக அவர் கைது செய்யப்பட்டார்.
உ.பி.,யில் கொலையை செய்து விட்டு, டில்லியில் தலைமறைவாக இருந்த கெம்சந்த்தை கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர். இருவருக்கும் இடையேயான முன் விரோதத்தில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
கொலையான ராகுல்குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், கொலை குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரயில் நிலையங்களில் இடைத்தரகர்கள் ஏமாறாதீர் என ரயில்வே எச்சரிக்கை
-
மத்திய அமைச்சர் முருகன் மீதான தேர்தல் வழக்கு ரத்து
-
தங்கம் சவரனுக்கு ரூ.1,600 குறைவு
-
மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
-
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
-
மின்மாற்றி கொள்முதல் டெண்டர் அரசுக்கு இழப்பு எதுவும் இல்லை ஐகோர்ட்டில் மின் வாரியம் தகவல்
Advertisement
Advertisement