ராமேஸ்வரம் சாலை ஓரத்தில் தெர்மாகோல் கழிவு குவியல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தெர்மாகோல், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளது.

ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பாம்பன் பாலம் முதல் ராமேஸ்வரம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இரு புறத்திலும் குப்பையை குவித்து தீவைப்பதால் புகை பரவி துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

ராமேஸ்வரம் அருகே மெய்யம்புளியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தெர்மாகோல் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.

இவை அப்பகுதியில் உள்ள படகு இன்ஜின் இலை தயாரிக்கும் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள்.

இக்கழிவுகளை ஊராட்சி துப்புரவு ஊழியர்கள் சேகரிக்காததால், ஆலை ஊழியர்கள் கழிவுகளை சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர். சுகாதாரக்கேடான கழிவுகளால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அருவருப்படைகின்றனர்.

Advertisement