தமிழக அரசின் தலைமை செயலர் மாற்றம் ; தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தத்தை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதையொட்டி, தேர்தலை நியாயமாக நடத்தும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அந்த வகையில், 3 ஆண்டுகளுக்கு ஒரே பதவியில் இருப்பவர்கள் மற்றும் புகாருக்குள்ளான, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாய்குமார் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டிருந்தார்.
வாசகர் கருத்து (31)
கரீம் பாய், ஆம்பூர் - ,
08 ஏப்,2026 - 21:56 Report Abuse
டூ லேட். அல்றேஅடி பட்டுவாடா முடிந்தது. ஃபார்முலா வில் இங்கே இவர்களை மிஞ்ச இவ்வுலகில் எவனும் இல்லை. ஆனால் ஓட்டு கொள்ளை அப்டின்னு அடுத்தவன குறை கூறுவது இவர்களின் வாடிக்கை 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
08 ஏப்,2026 - 20:58 Report Abuse
ஜனநாயக விரோத காங்கிரஸ் ஆட்சியில் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது ..... அது தொடரவேண்டும், தேர்தல் கமிஷனின் அதிகாரத்துக்கு கடிவாளம் போட்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க வேண்டும் என்பது என்ன நியாயம் ???? 0
0
Reply
பச்சையப்பன் கோபால்புரம் - ,
08 ஏப்,2026 - 17:53 Report Abuse
உடணடியாக எங்க தங்க தள்ளபதி உச்ச நீதி மன்றம் சென்று இந்த நிர்வாகத் தலயீட்டிரைக்கு தாடை உத்தரவு வாங்க வேண்டும்.இப்படியெல்லாம் செய்தால் 237 தொகுதியிலும் வெறி எங்க தங்க தள்ளடதிக்கே!!. 0
0
சந்துரு - ,
08 ஏப்,2026 - 18:19Report Abuse
வெறி எங்க தங்க தள்ளடதிக்கே!வெற்றி எங்கள் தங்க தளபதிக்கே ! இதை எவ்வளவு அழகு தமிழில் பதிவிட்டுள்ளீர்கள்! கலைஞர் மட்டும் இன்று உயிருடன் கோபால புரத்தில் இருந்திருந்தால் கோபாலபுரத்தில் இருந்து வீட்டை காலி செய்து இருப்பார். 0
0
பேசும் தமிழன் - ,
08 ஏப்,2026 - 19:30Report Abuse
பச்சையப்பா.... போயே போச்சு....எவ்வளவு தான் முட்டு கொடுப்பீர்கள் ...வாங்குன காசுக்கு மேல கூவ கூடாது. 0
0
Reply
Against traitors - Chennai,இந்தியா
08 ஏப்,2026 - 17:37 Report Abuse
உன் 200 ரூவா அறிவு அவ்வளவுதான். நீ பேர் மாத்தினாலும் கொண்டை மறையாது 0
0
Reply
raju - Madurai,இந்தியா
08 ஏப்,2026 - 17:34 Report Abuse
இதற்க்கு பெயர் தேர்தல்ல ? 0
0
Reply
கேடி ராகவன் ஐயங்கார் - ,இந்தியா
08 ஏப்,2026 - 17:32 Report Abuse
26 நாட்களுக்கு பிறகு புது ஆட்சி அமைக்கப்படும் ......இந்த இடைப்பட்ட காலத்தில் தாற்காலிகமாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தினசரி செயல்படவேண்டிய வேலைகளை தவிர்த்து கொள்கை ரீதியிலான வேலைகள் செய்திருந்தால் அதை அதற்க்கு முந்தய காலகட்டத்திற்கு மாற்றப்படவேண்டும் என்று ஒரு அரசாணை வெளியிட்டால் அதை தேர்தல் கமிஷன் வந்து அதை எதிர்த்து வழக்காடுமா ?? இது எத்தகைய முரண்களை ஏற்படுத்தும் ?? தேர்தல் கமிஷனுக்கு எத்தகைய தலைகுனிவை ஏற்படுத்தும் ?? 0
0
சந்துரு - ,
08 ஏப்,2026 - 17:49Report Abuse
கொள்கை ரீதியிலான முடிவை அதிகாரிகள் எப்படி எடுக்க முடியும்? தவிர இவர்கள் எடுத்த எந்த முடிவும் செல்லாது என்றெல்லாம் அடுத்து வருபவர்கள் தடாலடியாக உத்தரவிட முடியாது நண்பரே. இப்போது புதிதாக போடப் பட்டுள்ள தலைமைச் செயலரும் ஐ.ஏ.எஸ் படித்தவர்தான். தேர்தல் சிறப்பாக நடந்திட அதிகாரிகளை மாற்றம் செய்யும் அதிகாரம் தேர்தல் கமிசனுக்கு எப்போதும் உண்டு. 0
0
கேடி ராகவன் ஐயங்கார் - ,இந்தியா
08 ஏப்,2026 - 18:11Report Abuse
மாநில அரசின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடாதீர். 0
0
கேடி ராகவன் ஐயங்கார் - ,இந்தியா
08 ஏப்,2026 - 18:16Report Abuse
மக்களால் தேர்நடுக்கப்பட்ட முழு மாநில அரசுக்கும் காபந்து அரசுக்கும் உள்ள அதிகார வரைமுறைகளை ஐ ஏ எஸ் அதிகாரிகள் நன்கு அறிவார்கள். இந்த சமயத்தில் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு தினசரி செயல்பாடுகளை தொய்வின்றி நடத்திட மட்டுமே அதிகாரம். கொள்கை முடிவுகளை இந்த அதிகாரி எடுத்தால் அதை நீக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இருக்கு ... 0
0
rama adhavan - chennai,இந்தியா
08 ஏப்,2026 - 18:36Report Abuse
இன்றைய அவமானம் தான் பெரிது. ஆளும் கட்சி ஆட்சிக்கு வராவிட்டால் மாற்றப்பட்ட தலைமை செயலாளர் மீண்டும் பழைய பதவிக்கு வரவே முடியாதே. ஏதோ ஒரு முக்கியமில்லாத, அதிகாரமற்ற பதவியில் தான் ஓய்வு பெறும்வரை அமர்த்தப்படுவார். 0
0
vivek - ,
08 ஏப்,2026 - 23:24Report Abuse
ராகவா.உனக்கு ஒரு நல்ல பெயர் கூட வைக்க ஆளில்லயா 0
0
Reply
கேடி ராகவன் ஐயங்கார் - ,இந்தியா
08 ஏப்,2026 - 17:23 Report Abuse
ஏற்கனவே பாராளுமன்ற தொகுதி மறுவரையீடு என்ற போர்வையில் மக்கள் தொகையை கட்டுப்பாட்டுக்குள் வைத்த மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் ஒரு செயல்திட்டத்தை முன்னெடுக்கும் ஒன்றிய அரசு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கும் செயல்களை அல்லது அதன் அதிகாரங்களில் தலையிடும் வகையிலான செயல்களை கைப்பாவையான அரசியலமைப்பு கமிஷன்களை துணை கொண்டு எந்தவித தார்மீகமும் இல்லாமல் செயலாற்றுவதை அனுமதிக்கவே கூடாது. கூட்டாட்சி தத்துவத்துக்கு மாபெரும் வேட்டு வைக்கும் செயல்கள் நாட்டுக்கு நல்லதல்ல .... 0
0
சந்துரு - ,
08 ஏப்,2026 - 17:51Report Abuse
அதிகாரிகள் மாற்றத்திற்கு ஸ்டாலினை விட நண்பர் அதிகம் பதறுகிறாரே? 0
0
கேடி ராகவன் ஐயங்கார் - ,இந்தியா
08 ஏப்,2026 - 18:10Report Abuse
நான் பதறுவது நாட்டின் ஒருமுகத்தன்மையை சீர்குலைக்கும் தேர்தல் கமிஷனை பார்த்து. தேர்தல் கமிஷன் என்னும் உன்னத அமைப்பின் மாண்பு சீர்குலைவதை பார்த்து ... 0
0
rama adhavan - chennai,இந்தியா
08 ஏப்,2026 - 18:42Report Abuse
1970களில் இருந்த 13 மாவட்டங்கள் இப்போது 38 ஆக மறு வரையறை ஆகி உள்ளது. இதனால் மக்களுக்கு என்ன தீமை ஏற்பட்டது? அதே போல் தான் தொகுதி வரையறையும், மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. பாதிப்பு அரசியல்வாதிகளுக்கே. 0
0
Reply
கேடி ராகவன் ஐயங்கார் - ,இந்தியா
08 ஏப்,2026 - 16:45 Report Abuse
உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் நடந்தபோது இதே போல மாநில தலைமை செயலாளரையோ இல்லை டி ஜி பி யயோ இது போல பணிமாறுதல் செய்ததா தேர்தல் கமிஷன் ?? 0
0
பேசும் தமிழன் - ,
08 ஏப்,2026 - 19:47Report Abuse
அவர்களுக்கு எப்போது சந்தேகம் வருகிறதோ..... அப்போது அதிகாரிகளின் மாறுதலும் கூடவே வந்து சேரும்..... யாரை அதிகாரத்தில் அமர்த்தினால் தேர்தல் நியாயமாக நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும். 0
0
PR Makudeswaran - Madras,இந்தியா
08 ஏப்,2026 - 20:18Report Abuse
ஆணைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் இல்லை அன்பரே அதிகாரி மாற்றம் இடத்தை ஆளை பொருத்து 0
0
Reply
கேடி ராகவன் ஐயங்கார் - ,இந்தியா
08 ஏப்,2026 - 16:34 Report Abuse
தலைமை செயலாளரை மாற்றுகிறீர்கள் லஞ்சஒழிப்புத்துறை அதிகரிக்கும் தேர்தல் பணிக்கும் என்ன சம்பந்தம் ?? இதை உள்நோக்கம் என்று நடுநிலையாளர்கள் சொன்னால் நடுநிலை தவறியவர்களுக்கு கோபம் வந்துவிடும். உத்தரபிரதேச மாநில தேர்தல் நடக்கும்போதும் இதே நடைமுறை செயல்படுத்தப்பட்டதா ?? 0
0
G Mahalingam - Delhi,இந்தியா
08 ஏப்,2026 - 16:46Report Abuse
இரண்டு பேரும் திமுக அடிமைகள். 9 மாதமாக கே என் நேரு மீது வழக்கு பதிவு செய்ய சொன்னால் என்னபிரச்சனை. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படியும். முரண்டு. 0
0
Anbuselvan - Bahrain,இந்தியா
08 ஏப்,2026 - 16:53Report Abuse
விஷமத்தனத்திற்கு துணை போகிறவர்கள் மாற்றத்தால் படுவார்கள். 0
0
கேடி ராகவன் ஐயங்கார் - ,இந்தியா
08 ஏப்,2026 - 17:09Report Abuse
தேர்தல் பணிக்கும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி பணிமாறுதலுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கு நேரடி பதில் இல்லை என்பதே அதிகார துஷ்ப்ரயோகம் என்பது தெளிவாகுது . தேர்தல் கமிஷன் ஒன்றியத்தின் கைப்பாவையாக செயல்படுவதை பார்த்து வெட்கி தலைகுனிகிறேன். தேர்தல் பணிக்கு சம்பந்தம் இல்லாத அதிகாரிகளை மாற்றம் செய்ய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இருக்கா என்பதை தெளிவுபடுத்த அரசியலமைப்பு அமர்வை உச்சநீதிமன்றம் அமைக்கவேண்டும். இது குறித்த பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவேண்டும் . ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் வெட்கி தலைகுனியும் செயலை தேர்தல் கமிஷன் எந்தவித தார்மீகமும் இல்லாமல் செய்வதை நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் . ஒரு பக்கம் தேர்தல் கமிஷனின் பதவியை தரம் குறைக்கிறார்கள். தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை நீக்கிவிடும் வகையில் சட்டம் இயற்றுகிறார்கள். இது எதுவும் ஜனநாயக நாட்டின் நலனுக்கு உகந்ததாக தெரியவில்லை. 0
0
கேடி ராகவன் ஐயங்கார் - ,இந்தியா
08 ஏப்,2026 - 17:18Report Abuse
நாட்டின் ஒன்றிய அமைப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒரு அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட நிறுவனம் நடந்துகொண்டால் அதை உச்சநீதிமன்றம் தட்டிக்கேட்கும் வகையில் வழக்காடப்படவேண்டும். நாட்டின் ஒன்றிய கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படுவோரை இப்போது தட்டிகேட்காவிட்டால் எப்போதும் தட்டிகேட்கமுடியாது. இது நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி இழுத்துசென்றுவிடும். இங்கு தனிநபர் விருப்பு வெறுப்பை தள்ளி வைத்து தனிநபர் வழக்குகளை தள்ளிவைத்து நாட்டின் ஒன்றிய கூட்டாட்சித்தன்மையை கவனத்தில்கொண்டு இதை சரியான போக்கில் எடுத்துசென்றிடல் வேண்டும். அப்பட்டமாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் இத்தகைய இழிவான செயல்களில் தேர்தல் கமிஷன் ஈடுபடுவதை ஒருக்காலும் அனுமதிக்கமுடியாது. தனிநபர்களை தண்டிக்க பல்வேறு சட்டங்கள் இருக்கும்போது இப்படி அதிகாரதுஷ்ப்ரயோகம் செய்வதும் அதை ஏதும் எதிர்த்திடாமல் கடந்து செல்வதும் ஜனநாயகத்தின் அடிப்படைகளை தூர்க்க தோற்க செய்வதுக்கு ஒப்பாகும். இது இந்தியா தேசநலனுக்கு நல்லது இல்லை. . 0
0
Reply
Mecca Shivan - chennai,இந்தியா
08 ஏப்,2026 - 16:28 Report Abuse
ஜனாதிபதிக்கு ஒரு விண்ணப்பம். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அந்த அந்த மாநிலத்தை ஆளுநர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆளும் மாநில அரசை கலைத்துவிடவேண்டும். இதையே மத்திய பாரளுமன்ற தேர்தலின்போதும் செய்யவேண்டும் . அப்போதுதான் தேர்தல் நேர்மையாக நடைபெறும். செய்வீர்களா ? 0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement