ஃபோரக்ஸ்: ஊக வணிகம் குறைந்ததால் நிலைபெற்ற ரூபாய்

இந்தியாவை பொறுத்தவரை, கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் டாலர் பலவீனம் ஆகிய இரண்டுமே மிக முக்கியமானவை. எண்ணெய் விலை குறைவதால், நாட்டின் இறக்குமதி செலவு குறையும்; அதேநேரம், டாலரின் பலவீனம், இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த உதவும்.

ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கைகளால், ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து நான்கு வர்த்தக நாட்களாக லாபத்தை பதிவு செய்துள்ளது.

வங்கிகள் தங்களின் வர்த்தக நிலைகளை மறுசீரமைக்க, ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவிருப்பதால், வங்கிகள் வெளிநாடுகளில் வைத்திருந்த தங்களின் டாலர் இருப்புகளை விற்பனை செய்து வருகின்றன.

வங்கிகளின் இந்த தொடர் டாலர் விற்பனை வாயிலாக, சந்தையில் நிலவி வந்த ஊக வணிகம் குறைந்து ரூபாயின் மதிப்பு ஸ்திரமடைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு 92.80 முதல் 93.00 வரை இருந்த வலுவான ஆதரவு நிலையை உடைத்து கொண்டு முன்னேறியுள்ளது. 92.50 என்ற நிலைக்கு கீழ் தொடர்ந்து நிலைபெற்றால், அது மேலும் வலுவடைந்து 91.80 முதல் 92.00 என்ற நிலையை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. ஒருவேளை ரூபாயின் மதிப்பு குறையத் தொடங்கினால், அது 93.20 முதல் 93.50 என்ற வரம்பில் நிலை பெறலாம்.

Advertisement