தி.மு.க., பிரசார வாகனம் ராயபுரத்தில் பறிமுதல்

ராயபுரம்: அனுமதியின்றி பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட, தி.மு.க.,வின் பிரசார வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டசபை தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதன்படி, பிரசார வாகனங்களுக்கு அனுமதி பெற வேண்டும்.

ராயபுரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சுபேர்கான் பிரசாரத்திற்கு பயன்படுத்திய 'டாடா ஏஸ்' வாகனத்திற்கு அனுமதி பெறவில்லை; அதை தேர்தல் பறக்கும் படையினர், நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர்.

வில்லிவாக்கத்தை சேர்ந்த ஓட்டுநர் வினோத், 49, வாகனத்தை ஓட்டி வந்தது தெரிந்தது. அவர் மீது வழக்கு பதிந்து, வாகனத்தில் இருந்த தி.மு.க., கொடி, ஜெனரேட்டர், ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement