மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட வீல் சேர் தயார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளில், ஓட்டுச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் 14,445 ஓட்டுச்சாவடிகளில் சென்று, ஓட்டு போடுவதற்கு வீல் சேர்கள் தயாராக உள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல், வரும் 23ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக, செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்ட சபை தொகுதிகளில், மாற்றுத்திறனாளிகள் 14 ஆயிரத்து 445 பேருக்கு, ஓட்டுக்கள் உள்ளன.

இவர்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று, ஓட்டுப்போடுவதற்காக, அந்தந்த தொகுதிகளில், 14 ஆயிரத்து 445 வீல் சேர்கள் தயாராக உள்ளதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement