அரங்கநாதர் கோவில் உண்டியலில் ரூ. 29 லட்சம் காணிக்கை

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், இரண்டாவது கட்டமாக, ஆறு உண்டியல்களில் இருந்த பக்தர்களின் காணிக்கைகள் எண்ணியதில், 29 லட்சத்து, 74 ஆயிரத்து, 636 ரூபாய் இருந்தது.

காரமடை அரங்கநாதர் கோவிலில், இம்மாதம் மாசி மகத் தேர் திருவிழா நடந்தது. விழா முடிந்தவுடன் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெறும். கோவில் வளாகத்தில் 13 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டன. இதில் முதல் கட்டமாக ஏழு உண்டியல்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

நேற்று இரண்டாவது கட்டமாக, ஆறு உண்டியல்களில் இருந்த பக்தர்களின் காணிக்கைகள், எண்ணும் பணிகள் காலையில் துவங்கின.

துணை கமிஷனர் விமலா, தக்கார் உஷா நந்தினி ஆகியோர் தலைமையில், கோவில் செயல் அலுவலர் முத்துசாமி, கோவில்களின் இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் முன்னிலையில், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் ஆகியோர் காணிக்கைகள் எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர். இதில், 29 லட்சத்து, 74 ஆயிரத்து, 636 ரூபாய் காணிக்கையும், தங்கம், 63 கிராம், வெள்ளி, 152 கிராம் இருந்தது.

Advertisement