108 மணி நேர அகண்ட நாமம் துவக்கம்

மதுரை:மதுரை அய்யர்பங்களாவில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தின் 9வது ஆண்டு பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு, உலக நன்மைக்காக 108 மணி நேர அகண்டநாம கீர்த்தனம் துவங்கியது.

நேற்று முதல் ஏப்.,16 தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 வரை நடக்கும் இந்த அகண்ட ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனத்தில் அனைத்து பக்தர்களும் பங்கேற்கலாம். தினமும் காலை, மதியம் ப்ரசாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமத்வார் பொறுப்பாளர் ஹரிதாஸ் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

Advertisement