சமூக ஊடகம் வாயிலாக மோசடி அதிரடி சோதனையில் 600 பேர் கைது

புதுடில்லி: இணையவழி குற்ற வாளிகளை பிடிக்க டில்லி மாநகரப் போலீஸ் இரண்டு நாட்கள் நடத்திய சிறப்பு அதிரடி சோதனையில், 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சைபர் கிரைம் எனப்படும் இணையவழி குற்றவாளிகளைப் பிடிக்க, 'ஆப்பரேஷன் சை ஹாக் 4.0' என்ற சிறப்பு அதிரடி சோதனையை மாநகரப் போலீஸ் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தியது .

இந்தப் பிரம்மாண்ட அதிரடி நடவடிக்கையில், 600- பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 8,000- பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடக்கிறது. இந்த அதிரடி சோதனைக்கு 5,000 போலீசார் பயன்படுத்தப்பட்டனர். இதில், 499 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

தென்மேற்கு டில்லியில் இருந்து, சமூக ஊடகங்களில் போலி விளம்பரம் செய்து வெளிநாடு வாழ் இந்தியர்களை குறிவைத்து ஏமாற்றும் கும்பல் உட்பட பலர் சிக்கியுள்ளனர். கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.

Advertisement