நுால் விலை உயர்வால் பாதிப்பு

வெண்ணந்துார்: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார், அத்தனுார், அலவாய்-பட்டி, நடுப்பட்டி ஓ.சவுதாபுரம், வடுகம்பாளையம், ஆர்.புதுப்பா-ளையம் உள்ளிட்ட ஊர்களில் விசைத்தறி நெசவு தொழில் பிர-தான தொழிலாக உள்ளது. நெசவாளருக்கு முக்கியமான பொரு-ளான பருத்தி நுால், கடந்த, 10 நாட்களாக விலை உயர்ந்து வருகி-றது. 40ம் நம்பர் நுால், ஒரு கிலோ, 240 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, ஒரு கிலோ, 270 ரூபாயாக உயர்ந்துள்ளது.


நெசவு தொழிலில் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. ஏற்க-னவே, பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வரும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வு, தற்போது நுால் விலை ஏற்றம் மேலும் வேதனையை அளிப்பதாக, விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement