வேன் - பைக் மோதல் இருவர் படுகாயம்
மப்பேடு: மப்பேடு அருகே இருசக்கர வாகனம் மீது பயணியர் வேன் மோதிய விபத்தில், இருவர் படுகாயமடைந்தனர்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் முகுந்தன், 55. தக்கோலம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை, உடன் பணிபுரியும் சண்முகம், 50, என்பவருடன் 'யமஹா ஏரோக்ஸ்' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
மப்பேடு அடுத்த உளுந்தை அருகே வந்த போது, எதிரே வந்த 'மகேந்திரா டூரிஸ்டர்' வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேற்று இறக்கம்; இன்று உயர்வு; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 அதிகரிப்பு
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
-
தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? சீமான் பளீச் பதில்!
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
Advertisement
Advertisement