தடுப்பு அமைக்க மக்கள் கோரிக்கை

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, பட்டணம் ---- முள்ளுப்பாடி வழித்தடத்தில் நீரோடை குறுக்கிடுகிறது. இப்பகுதியில், தரைப்பாலத்தின் ஓரத்தில் தடுப்புகள் இல்லை.

இதனால், இந்த ரோடு வழியாக வாகனங்களில் பயணிக்கும் மக்கள் தவறி நீரோடையில் விழ வாய்ப்புள்ளது. மேலும், சில விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் போது, அவைகள் தவறி விழ வாய்ப்புள்ளது. எனவே, நீரோடை தரைப்பாளத்தின் இரு பகுதியிலும் தடுப்புகள் அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement