எம்.ஜி.ஆர்., கோவிலில் வழிபட்ட தி.மு.க., அமைச்சர் துரைமுருகன்
காட்பாடி: அ.தி.மு.க., ஓட்டு களை குறி வைத்து, எம்.ஜி.ஆர்., கோவிலில் அமைச்சர் துரைமுருகன் வழிபட்டார்.
வேலுார் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டான்துளசி கிராமத்தில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரகுபதியின் மகன் முரளி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டியுள்ளார்.
இந்த கோவிலில், நேற்று முன்தினம் இரவு, காட்பாடி தொகுதி தி.மு.க., வேட்பாளரான அமைச்சர் துரைமுருகன் தரிசனம் செய்தார். கோவிலில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு, துரைமுருகன் மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செய்தார்.
பின், துரைமுருகன் கூறுகையில், “எம்.ஜி.ஆரின் நற்குணங்கள் மற்றும் ஈகை குணம் பற்றி அனைவரும் அறிவர். யாராவது அவருக்கு துன்பம் கொடுத்தால் கூட, அடுத்த நாளே அதை மறந்து அவரோடு நட்பாகப் பழகக் கூடியவர்.
''அரசியலில் எதிர் துருவங்களாக இருந்தாலும், மனிதநேயம் மற்றும் தனிப்பட்ட நட்புக்கு, எம்.ஜி.ஆர்., - கருணாநிதி இருவருமே முக்கியத்துவம் கொடுத்தனர்,” என்றார்.
அ.தி.மு.க., ஓட்டுகளை குறி வைத்தே, எம்.ஜி.ஆர்., கோவிலுக்கு துரைமுருகன் சென்றதாக கூறும் தி.மு.க.,வினர், 'நடிக்க ஆசைப்பட்ட துரைமுருகனை, சட்டம் படிக்க வைத்தவர் எம்.ஜி.ஆர்., அதனால், தான் எம்.ஜி.ஆர்., கோவிலுக்கு சென்றார்.
'கடந்த 1984 தேர்தலில் தன்னை தோற்கடித்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரகுபதியின் மகன் முரளி கட்டிய கோவிலில் துரைமுருகன் வழிபட்டது, அ.தி.மு.க., மற்றும் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசிகளின் ஓட்டுகளையும் குறி வைத்து தான்' என்றனர்.
இதற்கிடையே, கடந்த தேர்தலில் துரைமுருகனிடம் வெறும் 746 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராமு, இந்த முறையும் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த முறை, அவர் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருவதால், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் துரைமுருகன் இருக்கிறார் என அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (20)
Anbuselvan - Bahrain,இந்தியா
10 ஏப்,2026 - 12:23 Report Abuse
திராவிட மாடல் இன் பகுத்தறிவு கொழுந்துகளை வாழ்த்திடுவோம் 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
10 ஏப்,2026 - 11:45 Report Abuse
எம்ஜிஆர் ரசிகர்களின் ஓட்டுக்களை ஆட்டயப்போடணும் ... 0
0
Reply
ganesan - ,இந்தியா
10 ஏப்,2026 - 11:30 Report Abuse
வீர மணி கூட்டிட்டுபோ , ஜெய்ச்சிறுவ 0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
10 ஏப்,2026 - 11:30 Report Abuse
ஒட்டு வேண்டும் என்றால் என்ன தொழிலையும் செய்ய தயார் 0
0
Reply
sengalipuram - ,இந்தியா
10 ஏப்,2026 - 11:16 Report Abuse
இந்த திராவிட பாரம்பரியத்தின் வரலாறு அப்படி .. Gen Z இளைஞ்சர்களுக்கு பெரியார், அண்ணா , கருணாநிதி ,ஸ்டாலின் அவர்களின் மற்றோரு முகம் தெரிய வாய்ப்பில்லை . 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
10 ஏப்,2026 - 11:14 Report Abuse
திராவிடன் ஈர வெங்காய பகுத்தறிவு படி இறந்தவனை வணங்குகிறார் 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
10 ஏப்,2026 - 11:12 Report Abuse
MGR கோவிலுக்கு செல்லலாம். ஏன் என்றால் அவர் கொடுத்த நிதி உதவியில் படித்த நபர் இவர். ஆனால் ஜெயலலிதா கோவிலுக்கு செல்ல முடியாது. ஏன் என்றால் அவர் செய்த செயல், தமிழகத்தையே தலை குனிய வைத்தது. 0
0
Reply
Gurumurthy Kalyanaraman - London,இந்தியா
10 ஏப்,2026 - 10:54 Report Abuse
இப்படியே அம்மா கோவிலுக்கும் சென்று, அவர் காலில் விழுந்து வழிபாட்டு விட்டு ஒரு வார்த்தை அம்மாவை பற்றியும் சொல்லி விடுஙகள் சார். எடபாடிக்கு ஓட்டே விழாமால் இருக்க இது ஒன்றுதான் பகுத்தறிவு வழி. 0
0
Reply
BALAJI - Coimbatore,இந்தியா
10 ஏப்,2026 - 10:03 Report Abuse
இறந்து போன ஒரு மனிதருக்கு கோவில் கட்டி கடவுளாக வழிபடுவது எல்லாம் என்னவென்று சொல்வது 0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
10 ஏப்,2026 - 08:40 Report Abuse
இவர்களின் சனாதன பக்தி மெய் சிலிர்க்கிறது. 0
0
Reply
மேலும் 10 கருத்துக்கள்...
மேலும்
-
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
Advertisement
Advertisement