வாக்காளர்களுக்கு ஏப்., 12 முதல் பூத் சிலிப்
சிவகங்கை:சிவகங்கை வாக்காளர்களுக்கு பூத் சிலிப் ஏப்., 12 முதல் 18 வரை வழங்கப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 5,48,106 ஆண், 5,71,186 பெண், 43 மூன்றாம் பாலின வாக்காளர் என 11,19,335 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஓட்டுச்சாவடிகளை எளிதாக கண்டறியவும், பாகம் மற்றும் வரிசை எண்ணை எளிதில் அறியும் விதமாக ஏப்., 12 முதல் 18 வரை அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் அலுவலர்கள் மூலம் வாக்காளர் பூத் சிலிப் வழங்கப்பட உள்ளது. வாக்காளர்கள் தங்களது பூத் சிலிப்பை பெற்று 100 சதவீதம் ஓட்டினை பதிவு செய்ய வேண்டும் என்றார். ///
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
களிமண்குண்டில் காட்சி பொருளான ஆர்.ஓ., பிளான்ட் அரசு நிதி வீணடிப்பு
-
மக்களின் பிரச்னையை தீர்க்க வருவதே அ.தி.மு.க., வேட்பாளர் கந்தன் பெருமிதம்
-
ஹாக்கி வீரர்களின் தேர்தல் விழிப்புணர்வு
-
நாளுக்கு நாள் தொல்லை தாங்கல! விரட்டும் போது கடிக்க வருது
-
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கன்டோன்மென்ட் பகுதிகள் வரும் அமைச்சர் அன்பரசன் உறுதி
-
முளைப்பாரி ஊர்வலம்
Advertisement
Advertisement