அக்னிச்சட்டி எடுத்தவர் மாரடைப்பால் மரணம்

பெரியகுளம்;பெரியகுளம் வடகரை புகையிலை தோட்ட மேற்குத் தெருவை சேர்ந்தவர் சரவணன் 39.

தேனி பருப்பு மில்லில் வேலை செய்தார். பெரியகுளம் வீரகாளியம்மன் கோயில் திருவிழாவில் சரவணன் விளையாட்டு அக்னிசட்டி எடுத்து ஆடி வந்துள்ளார். கோட்டை மேடு பகுதியில் செல்லும் போது, நெஞ்சுவலி ஏற்பட்டது. பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement