சிறை காவலர்களுக்கு மிகை நேர ஊதிய உயர்வு 'அம்போ'


* தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில், 500 கைதிகளை அடைக்கும் வகையில் மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்படும். அதற்கான புதிய கட்டடம் கட்டப்படும்

* அனைத்து மத்திய சிறைகளில் உள்ள பணியாளர் குடியிருப்புகளில், 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் 18.90 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும். திட்டம் முழுமை பெறவில்லை

* சிறைத் துறையில், முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கு, மிகை நேர பணிக்கான ஊதியம், காவல் துறையைச் சேர்ந்த காவலர்களுக்கு இணையாக, 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், திட்டம் அமலுக்கு வரவில்லை

* மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகளுக்கு உணவு வினியோகம் செய்ய, மின்சார ஆட்டோ கொள்முதல் செய்யப்படும்

* சேலம் மாவட்டத்தில், 800 கைதிகளை அடைக்கும் வகையில் மாவட்ட சிறை; 100 பெண் கைதிகளை அடைக்க தனி கிளைச்சிறை அடங்கிய வளாகம் அமைக்கப்படும்

* நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்காக, 500 கைதிகளை அடைக்க, நாமக்கல்லில் புதிய மாவட்ட சிறை வளாகம் கட்டப்படும்

* தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறையில், கூடுதலாக 300 கைதிகளை அடைக்கும் வகையில் இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்துடன் கூடுதல் வசதி ஏற்படுத்தப்படும்

* வேலுார், கோவை, கடலுார், புழல் மத்திய சிறைகளுக்கு, 74 லட்சம் ரூபாயில் அவசரகால ஊர்திகள் வழங்கப்படும்.

Advertisement