அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட இரு வாலிபர்கள்
திருச்சி: அரிவாளுடன் பைக்கில் சுற்றி ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
திருச்சி மாநகரில், டி.வி.எஸ்., டோல்கேட் பகுதியில் இருந்து, மத்திய தலைமை தபால் அலுவலகம் செல்லும் சாலையில், நேற்று முன்தினம் மதியம், இரு வாலிபர்கள் பைக்கில் சென்றுள்ளனர். பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், இரண்டு அடி நீளமுள்ள அரிவாளை சுழற்றியபடி கூச்சலிட்டார்.
பின், அரிவாளை சாலையில் தேய்த்து, தீப்பொறியை தெறிக்கவிட்டு, சாகசத்தில் ஈடுபட்டார். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அரிவாளுடன் வாலிபர்கள் ரகளை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தல் பயிற்சி வகுப்புகளில் தபால் ஓட்டளித்த ஆசிரியர்கள்: கட்டாயப்படுத்தியதால் அதிருப்தி
-
பள்ளி கட்டடம் சேதம் :தகர செட்டில் வகுப்பறை
-
மேற்கு தொகுதியில் பட்டா பிரச்னைக்கு தீர்வு: வேட்பாளர் பாலாஜியை ஆதரித்து அமைச்சர் மூர்த்தி பிரசாரம்
-
தி.மு.க., ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து சிதம்பரம் பிரசாரம்
-
கழிப்பறை வசதி இல்லா ஓட்டுச்சாவடி
-
மராமத்து பணி துவக்கம்
Advertisement
Advertisement