தனுஷ்கோடி டூ இலங்கை; இலங்கை டூ தனுஷ்கோடி ஹரியானா இளம் பெண் இன்று நீந்துகிறார்

ராமேஸ்வரம்: ஹரியானா நீச்சல் வீராங்கனை காம்யா பரத்வாஜ் இன்று (ஏப்.,12) தனுஷ்கோடி டூ இலங்கைக்கும் பின் இலங்கையில் இருந்து தனுஷ் கோடிக்கும் 56 கி.மீ., கடலில் நீந்தி கடக்க உள்ளார்.

ஏப்., மே வரை கோடை காலத்தில் பாக்ஜலசந்தி கடலில் அதிக நீரோட்டம் இருக்கும். இந்த சீசனில் நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள் பலரும் இலங்கை டூ தனுஷ்கோடி கடலில் நீந்தி கடந்து சாதனை படைப்பார்கள்.

இந்நிலையில் தேசிய அளவில் நீச்சல் போட்டிகளில் சாதனை செய்த ஹரியானா குருகிராம் பகுதியை சேர்ந்த காம்யா பரத்வாஜ் 20, இன்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து கடலில் குதித்து நீந்தி இலங்கை தலைமன்னார் செல்கிறார்.

சில மணி நேரங்களில் (மறுநாள் ஏப்.,13) மீண்டும் இலங்கையில் இருந்து நீந்தி அதிகாலை தனுஷ்கோடி வர உள்ளார். நீச்சல் வீராங்கனையான இவரக இரு மார்க்கத்திலும் 56 கி.மீ., நீந்தி கடக்க இருக்கிறார்.

Advertisement