கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
நமது நிருபர்
தி .மு.க., எம்.எல்.ஏ.,வின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கைத்தறி நெசவாளர்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர். மேலும், எம்.எல்.ஏ., வருகையின் போதும் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டசபை தொகுதி, வாழைப்பந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பச்சையம்மன் நகர் பகுதியில், ஆற்காடு தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நேற்று முன்தினம் ஓட்டு சேகரிக்க செல்ல இருந்தார். அதையறிந்த, பச்சையம்மன் நகரில் வசிக்கும் கைத்தறி மற்றும் நெசவு தொழிலாளர்கள், வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி வைத்தனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு சென்று, கருப்புக் கொடிகளை அகற்றினர். அப்போது கிராமத்தினருக்கும், போலீசார் மற்றும் தி.மு.க.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பானது. மேலும், பிரசாரத்திற்கு சென்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., ஈஸ்வரப்பனை நோக்கி கருப்புக் கொடிகளை காட்டி நெசவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து, கைத்தறி நெசவாளர் சரவணன் கூறியதாவது: வாழைப்பந்தல் பகுதியில், பட்டு கைத்தறி நெசவு தொழிலை நம்பி 200 குடும்பங்கள் உள்ளோம். கடந்த பருவமழை காலத்தின் போது, மூன்று மாதங்களாக கைத்தறி இயந்திரங்களில் மழைநீர் தேங்கியது.
தொழில் முடங்கி, ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம். நிவாரணம், உதவிகளை எம்.எல்.ஏ., வழங்கவில்லை. எங்கள் மாவட்டத்தில் தான், கைத்தறி துறை அமைச்சர் காந்தி இருக்கிறார். ஆனால், அவரும் எங்கள் மேம்பாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. அதனால் தான் எதிர்ப்பு தெரிவித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
உலகில் உச்சத்தில் இருக்கும் எதற்கும் ஒரு காலத்தில் அழிவு உண்டு இது நிதர்சணம் உதாரணங்கள் நிறைய உள்ளன
இந்நேரம் இது எடப்பாடி ஆட்சியை இருந்து திருட்டு திமுக எதிர்க்கட்சியாய் இருந்திருந்தால் தெருக்கு தெரு கஞ்சி தொட்டியை திறந்து தமிழகத்தை களேபரம் ஆக்கி இருப்பார்கள்.. இந்த விசயத்தில் தற்போதைய எதிர்கட்சிகள் வேஸ்ட்டு...
இந்த ஏழை ஊழைப்பாளிகளின் சாபம் திமுகவை சும்மா விடாது
இம்முறை திமுக மண்ணை கௌவ்வுவது உறுதி. ஆடிய ஆட்டம் அடங்கட்டும்.
திமுகவுக்கு மற்ற எல்லா இடத்துலயும் எதிர்ப்பு மட்டும் தான் இருக்கு
இதற்கெல்லாம் தீர்வு வரும் 23 ந்தேதி ஒட்டு மொத்தமா வெச்சி செய்யுங்கள் மக்களே. . இனிமே வந்தால் மாட்டை குளிப்பாட்ட சொல்லுங்கள். செய்வார்கள்.
மாட்டை குளிப்பாட்டுவது புண்ணியம் அதை இந்த திருடனுக கூட்டத்துக்கு கொடுக்கக் கூடாது
நிறைய இடங்களில் திமுகவிற்கு பலத்த எதிர்ப்பிணை காண முடிகின்றது. இதுவரை இல்லாத அளவுக்கு திமுகவின் எதிர்ப்பு என்பது திமுக தலைமையை அலறவைத்துவிட்டது. கனிமொழியை விரட்டுகின்றார்கள். அமைச்சர்களை விரட்டுகின்றார்கள். வலைத்தளங்கள் எல்லாமே திமுக எதிர்ப்பைத்தான் காண முடிகின்றது.
இப்படிப்பட்ட எதிர்ப்பை இதுவரை திமுக சந்தித்ததுமில்லை. அதனால் ஆட்சி அதிகாரம் இந்த முறை கையை விட்டு ஓடிப்போய்விடும் என்கிறார்கள். அதனால் வேட்பாளர்கள் கூட அதிக அளவுக்கு பணத்தை செலவழிக்க தயக்கம் காட்டுகின்றார்கள் என்கிற செய்தி திமுகவின் வெற்றி என்பது ஒற்றை இலக்கத்தில் கூட திணறும் என்கிறது செய்திகள்.
ஏன் இந்த போலீஸ் அராஜகம் ஒன்னுக்கும் உதவாத MLA.MP எதுக்கு கறுப்புக்கொடி காட்டத்தான் செய்வார்கள் போலீஸ் ஏன் அடாவடிதனம் செய்கிறார்கள் ஜனநாயக நாட்டில் மக்களுக்கு உரிமைக்கு போராட சுதந்திரம் இல்லையா ஏன்னா கொடுமை இது ..
நல்லா கூவுவாறாங்க. ஆனா மொத்த பேரும் திமுகவிற்கு தான் ஓட்டு போடுவாங்கமேலும்
-
தி.மு.க., முடக்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலை புதுப்பிக்கப்படும்! பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச்சு
-
ஜவுளித்தொழில் மேம்பட சிறப்பு பூங்கா அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
-
உடுமலை, பொள்ளாச்சி இனிதாக
-
பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 44.96 அடி
-
கம்பன் கலை மன்றத்தில் மாதாந்திர சொற்பொழிவு
-
தாவரவியல் பூங்காவில் அடிப்படை வசதிகளில்லை