மதுரை, கோவை மெட்ரோ ரயில் தி.மு.க., பொய் செய்தி பரப்புகிறது: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு

1

மதுரை: மதுரையில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில், மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் கலந்து கொண்டு பேசியதாவது:

மதுரை மாநகராட்சியில் தி.மு.க.,வினர் 200 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் டி.பி.ஆர்., அறிக்கையை திருத்தி தருமாறு கேட்டதற்கு, அதை திருத்தம் செய்து அனுப்பாமல், மத்திய அரசு மறுப்பு தெரிவித்து விட்டதாக தி.மு.க.,வினர் பொய் செய்தி பரப்புகின்றனர்.

மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணியிலும் நிலத்தை முழுமையாக கையகப்படுத்தி தரவில்லை. தமிழின் தொன்மைக்கும், கலாசாரத்திற்கும் மதிப்பளிக்காமல் இழிவுபடுத்திய உதயநிதி, எப்போதுமே முதல்வராக வரக்கூடாது. திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை ஏற்படுத்திய மோசமான சூழலை மறந்து விடக்கூடாது.

நிலம், மணல் மாபியாக்கள் தான் தமிழகத்தை ஆளுகின்றனர். தி.மு.க., அரசு வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு பேசினார்.

Advertisement