பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தில் திடீர் மயக்கம்
சேலம்: சேலம் மேற்கு தொகுதியில், ராமதாஸ் அணி சார்பாக போட்டியிடும், எம்.எல்.ஏ., அருளை ஆதரித்து, பள்ளப்பட்டியில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
அதில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று பேசினார். தொடர்ந்து, ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ் புறப்பட்டார்.
அவரை, இரு தொண்டர்கள் கைத்தாங்கலாக அழைத்து சென்றனர். அப்போது, திடீரென ராமதாஸ் தடுமாறி மயக்கம் அடைந்தார். இதனால், நிர்வாகிகள், தொண்டர்கள், பதறி அடித்து அவரை நெருங்கினர்.
அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதில் ராமதாசை அனுப்பி வைத்தனர். அவர், குரங்குச்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சேலத்தில் பிரசாரம் செய்தபோது மயக்கமடைந்த பா.ம.க., நிறுவனர் ராமதாசை உடனிருந்தோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓடி ஜெயிப்பதற்கு ஓட்டப்பந்தயமா: இது ஓட்டுப்பந்தயம் என்கிறார் சீமான்
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை விவகாரம்; கடிதத்தை வெளியிட்டு முதல்வருக்கு நிர்மலா பதிலடி
-
பாமகவில் ‛கண்ணாமூச்சி' ஆடும் அப்பாவும் மகனும்: கோபத்தில் தந்தை குதிக்கிறார்; பாசத்தில் மகன் தவிக்கிறார்: குழப்பத்தில் பாட்டாளி'கள்!
-
அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி
-
விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்கணும்: அண்ணாமலை ஆதரவு குரல்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் பலி
Advertisement
Advertisement