உயர் ரத்த அழுத்தம்: மருத்துவ விடுப்பில் சென்றார் டேவிட்சன்

16


சென்னை : உயர் ரத்த அழுத்த பாதிப்பு காரணமாக, 22 நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்வதாக, கட்டாய காத்திருப்பு பட்டியலில் உள்ள டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியுள்ளார்.


டிஜிபி சந்தீப்ராய் ரத்தோடுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: நான் மார்ச் 2ம் தேதி, சென்னை ஆலந்துாரில் உள்ள அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக பொறுப்பேற்றேன். அதேபோல, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, ஆயுதப்படை அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேன். இந்த இரு பதவிகளும் தேர்தல் தொடர்பானவை அல்ல. நான் ஏப்., 8ம் தேதி, அந்தப் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய காத்திருப்பில் உள்ளேன்.


இதற்கு முன், எனக்கு இதய பிரச்னை காரணமாக, 'ஆஞ்சியோ பிளாஸ்டி' அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. மேலும், உயர் ரத்த அழுத்த பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வருகிறேன். குறைந்தது, 20 நாட்கள் ஓய்வு எடுத்து, மருந்துகள் உட்கொள்ள வேண்டும் என, டாக்டர் ஆலோசனை கூறியுள்ளார். அதனால், 22 நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement