வெயிலின் தாக்கத்தால் நுங்கு விற்பனை ஜோர்
வால்பாறை: கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வால்பாறையில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில், கடந்த மூன்று மாதங்களாக வெயில் நிலவி வருகிறது. இந்நிலையில் இம்மாதம் துவக்கத்தில் இருந்து வால்பாறை மலைப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
இதனால், நகரில் உள்ள கடைகளில் இளநீர், தர்பூசணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
வியாபாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் திரண்டுள்ள சுற்றுலா பயணியர் சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் நுங்கு, தர்பூசணி, இளநீர் போன்றவைகளை அதிகளவில் உட்கொள்கின்றனர். நுங்கு 10 ரூபாய்க்கும், இளநீர் 60 ரூபாய்க்கும், தர்பூசணி கிலோ, 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வால்பாறையிலும் கோடை வெயில் நீடிப்பதால், நீர்ச்சத்து அதிகமுள்ள பழ வகைகள் அதிக அளவில் விற்பனையாகிறது' என்றனர்.
மேலும்
-
பஞ்சாப் தேர்தலுக்கு மத்திய அரசு தயார்: கெஜ்ரிவால் கிண்டல்
-
கிரைம் கார்னர்
-
தொகுதி மறுவரையறைக்கு ஸ்டாலின் எதிர்ப்பு: இன்று கருப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு
-
நொய்டாவில் தொடரும் போராட்டங்கள் அமைதி முயற்சியில் போலீசாருக்கு வெற்றி
-
கெஜ்ரிவாலுக்கு பிரச்னை என்றால் எந்த அமைப்பையும் கேள்வி கேட்பார் டில்லி முதல்வர் ரேகா குப்தா கோபம்
-
தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க முடிவு!: 'இண்டி' கூட்டணி கட்சிகள் திட்டவட்டம்