குப்பை கழிவுகள் கொட்டி எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி

காஞ்சிபுரம்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையையொட்டி, தாமல் கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி உள்ளது.

இந்த ஏரிக்கரை ஓரத்தில், தாமல் கிராமத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் கிராமப்புற இணைப்பு சாலை உள்ளது.

இந்த இணைப்பு சாலையோரம் கிராம மக்களால் குப்பை கொட்டப்படுகிறது. இதை மர்ம நபர்கள், தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்.

எனவே, சாலையோரம் குப்பை கழிவுகள் எரிக்கப்படும் இடத்தை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement