மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்

19

புதுடில்லி: 'மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடு முழுதும் அமல்படுத்த வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. வரும் 2029ல் நடக்கும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள், மகளிர்
இடஒதுக்கீடு நடைமுறையுடன் நடக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமானது. எனவே, இந்த சட்டத் திருத்தத்துக்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஆதரிக்க வேண்டும்.
இதற்காக நடக்கும் பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தில், எம்.பி.,க்கள் தவறாமல் பங்கேற்க
வேண்டும்' என, லோக்சபா மற்றும் ராஜ்யசபா கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க, 2023 செப்டம்பரில் மத்திய பா.ஜ., அரசு சட்டம் இயற்றியது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்து, அதன்பின் தொகுதி மறுவரையறை செய்த பின்னரே, இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வரும்
என்றும் கூறப்பட்டது.

இதனால், இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வரவில்லை. தற்போதைய நிலவரப்படி, 2027ல் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடையும். எனவே, 2029 லோக்சபா தேர்தலுக்குள் இதை அமல்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதையடுத்து, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கேற்றபடி மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் கொண்டு
வரப்பட உள்ளது.

கடிதம்



இதற்காக, வரும் 16 முதல் 18ம் தேதி வரை பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தொடர் நடக்கிறது. இதையொட்டி, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

மகளிருக்கு முன்னேற வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் சமூகத்திலும் முன்னேற்றம் ஏற்படும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் தொலைநோக்கு அரசியல் பயணத்தில், பெண்களின் பங்களிப்பும் அவசியம் தேவை. மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை, நாடு முழுதும் அமல்படுத்த வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. வரும் 2029ல் நடக்கும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள், மகளிர் இடஒதுக்கீடு நடைமுறையுடன் நடக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமானது.

வரும் 2029ல் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், ஜனநாயக
அமைப்புகளுக்கு புதிய ஆற்றல் பாயும்; பொது மக்களின் நம்பிக்கை வலுப்பெறும். நிர்வாக
ஆட்சியில் மகளிருக்கு அதிக அளவில் பிரதிநிதித்துவமும், பங்களிப்பும் கிடைப்பது
உறுதியாகும்.

பங்கேற்க வேண்டும்



எனவே, பார்லி.,யில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரும் போது, எம்.பி.,க்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து ஒரே குரலாய் ஒலிக்க வேண்டும். எம்.பி.,க்கள் அனைவரும் பார்லி., சிறப்பு கூட்டத்தில் தவறாமல் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு கடிதத்தில்
கூறியுள்ளார்.

இதற்கிடையே, மகளிர் இடஒதுக்கீடு திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: விண்வெளி முதல் விளையாட்டு வரை; ஆயுதப் படைகள் முதல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை, ஒவ்வொரு துறையிலும் மகளிர் பங்கெடுத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மூலம் தங்களது திறன்களை மகளிர் நிரூபித்து கொண்டேவருகின்றனர்.

பார்லி.,யில், 2023ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட தருணத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நம் நாட்டின் பெண்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு
முக்கியமான முடிவுக்கு, கட்சி பாகுபாடு இல்லாமல், அனைவரும் ஒற்றுமையுடன் ஆதரவு அளித்ததை இந்த உலகமே கண்டு வியந்தது.

அப்படி ஒரு தருணம் மீண்டும் நிகழ வேண்டும். பார்லி.,யில் இந்த வரலாற்று சிறப்புமிக்க
நிகழ்வுக்காக, அனைவரும் ஒற்றுமையுடன் அணி சேருவர் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

@block_Y@'அரசியல் ஆதாயமே காரணம்'

''தொகுதி மறுவரையறை தொடர்பான விபரங்களை வெளியிடாமல், மகளிர் இடஒதுக்கீடு சட்டம் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்துவது என்பது சாத்தியமற்றது,'' என, காங்., தேசிய தலைவர்மல்லிகார்ஜுன கார்கேதெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''தொகுதி மறுவரையறை மற்றும் அது சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்த பின், அதாவது ஏப்., 29க்கு பின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, இது குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம். ''அரசியல் ஆதாயத்துக்காகவே ஐந்து மாநில தேர்தல் நடக்கும் சமயத்தில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற, பார்லி.,யின் சிறப்பு கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது,'' என்றார். block_Y

@block_B@'வஞ்சகமான உள்நோக்கம்'

திரிணமுல் காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான டெரக் ஓ பிரையன் கூறியுள்ளதாவது: தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதில், வெற்றி பெறவே இப்படியொரு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பார்லி., ஒன்றும் குஜராத் ஜிம்கானா கிளப் அல்ல; நினைத்த போதெல்லாம் கூட்டுவதற்கு. நாட்டு மக்களையும், பார்லி.,யையும் கேலி செய்வதை நிறுத்துங்கள். உங்கள் இருவரின் உள்நோக்கமும் வஞ்சகம் நிறைந்தது.இவ்வாறு அவர் கூறியுள்ளார். block_B

@block_G@273 இடங்கள் கிடைக்கும்!

பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரில் இந்த திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், லோக்சபாவில் எம்.பி.,க்களின் 'சீட்' எண்ணிக்கை 816 ஆக உயரும். அதில் 273 இடங்கள், 33 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ்மகளிருக்கு ஒதுக்கப்படும்.block_G

Advertisement