சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கிருஷ்ணகிரி: பிரதோஷத்தையொட்டி, சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.


சித்திரை மாத தேய்பிற‍ை பிரதோஷத்தையொட்டி, கிருஷ்ணகிரி பழையபேட்டை கவீஸ்வரன் கோவில் அருகிலுள்ள சோமேஸ்-வரர் கோவில் மற்றும் புதுப்பேட்டை சந்திர மவுலீஸ்வரர் கோவிலில், நந்திக்கு அபிஷேகம் செய்து, அருகம்புல் மாலை அணிவித்தனர். தொடர்ந்து, சிவலிங்கத்துக்கு, பால், தயிர், தேன், கரும்புசாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, வில்வ இலை, வெள்ளை தாமரை, மல்லிகை போன்ற மலர்களால் அலங்காரம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடுகள் நடந்தன.

Advertisement