எண்ணெய் நிறுவன பங்குகள் 6% சரிவு

ச ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று, 7 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து 102 ரூபாயை தாண்டியது. இதன் காரணமாக 'பி.பி.சி.எல்., ஹெச்.பி.சி.எல்., மற்றும் ஐ.ஓ.சி.,' ஆகியவற்றின் பங்கு விலை நேற்றைய வர்த்தகத்தின் இடையில், 6 சதவீதம் வரை சரிந்தன.

காரணங்கள்  மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு

 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாதது

 உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி உயர்வு.

Advertisement