டில்லியில் துணை ஜனாதிபதி சிபிஆர் இல்லத்தில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
நமது டில்லி நிருபர்
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லத்தில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு கொண்டாடினார்.
டில்லியில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷணன் இல்லத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அவர் ராதாகிருஷ்ணனை சந்தித்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். பிறகு அவரது இல்லத்தில் உள்ள பூஜை அறையில் வழிபாட்டிலும் ஈடுபட்டார். பிரதமர் மோடிக்கு முருகப்பெருமான் புகைப்படத்தை சி.பி.ராதாகிருஷ்ணன் பரிசளித்தார்.
தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புனிதமான புத்தாண்டு தினத்தையொட்டி இனிய நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் பிரார்த்திக்கிறேன். சிறப்புமிக்க இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும். இது தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் ஒரு தருணமாகும்.
அதன் இலக்கியம், இசை, கலை, தத்துவம், பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது. சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும். மகத்தான தமிழ்ப் பண்பாட்டால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (14)
GUNA SEKARAN - chennai,இந்தியா
14 ஏப்,2026 - 14:47 Report Abuse
நல்லது. துணை ஜனாதிபதி அவர்கள் தமிழராக வேட்டி உடுத்தி இருந்திருந்திருக்கலாம். 0
0
Reply
Sangi Mangi - ,இந்தியா
14 ஏப்,2026 - 14:00 Report Abuse
பிஜேபி தேர்தல் அறிக்கை???????? போதைப்பொருள் கடத்தும் கும்பலுக்கு மரணதண்டனை, அதை குஜராத்தில் தான் செய்யவேண்டும், அங்க செய்தல் இந்தியாவில் எங்கும் போதை பொருள் கிடைக்காது,, 0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
14 ஏப்,2026 - 13:38 Report Abuse
பழம் நீயப்பா ஞானப்
பழம் நீயப்பா தமிழ்ஞானப்
பழம் நீயப்பா 0
0
Reply
venkat - Chennai,இந்தியா
14 ஏப்,2026 - 12:11 Report Abuse
இனிய பராபவ புதிய தமிழ் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள் 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
14 ஏப்,2026 - 11:06 Report Abuse
ஹிந்து பண்டிகை என்றால் வாழ்த்து கிடையாது என்பது திராவிடன் கொள்கை. அதை மாற்ற நினைத்த போலி திராவிடன் தை மாதத்திற்கு மாற்றி அதிலும் சிக்கி கொண்டான். 0
0
Reply
ஜெகதீஸ்வரன் தண்டபானி - Coimbatore,இந்தியா
14 ஏப்,2026 - 10:57 Report Abuse
நீங்கள் கட்டமைக்க முயலும் பிம்பம் போலியானது. பிரதமர் மோடிக்கு தமிழரின் பெருமை தெரியும்.
திராவிடம் பேசுபவர்கள் தமிழனின் அடையாளத்தை அழிக்க முயல்கிறார்கள். அதை நடக்க விடமாட்டோம் 0
0
Reply
ManiK - ,
14 ஏப்,2026 - 10:38 Report Abuse
ஸ்டாலின் வீடுவீடாக போய் தமிழ்புத்தாண்டு இன்னிக்கு இல்லைனு சொல்லிகிட்டு இருக்கிறார். திராவிட வழி..தலை வலி... 0
0
Reply
BALAJI - Coimbatore,இந்தியா
14 ஏப்,2026 - 09:23 Report Abuse
உங்களுக்குத்தான் தமிழ் தமிழர்களே பிடிக்காதே பின் ஏன் வாழ்த்து சொல்றிங்க 0
0
G Mahalingam - Delhi,இந்தியா
14 ஏப்,2026 - 09:36Report Abuse
ஸ்டாலின் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லவில்லையே? 0
0
ஆரூர் ரங் - ,
14 ஏப்,2026 - 09:45Report Abuse
தமிழ் மண்ணை தெலுங்கன ஆள விட்டுவிட்டு 0
0
vivek - ,
14 ஏப்,2026 - 10:00Report Abuse
...இங்கு இருக்கும் முதல்வர் வாழ்த்து கூறமாட்டார் 0
0
T.sthivinayagam - agartala,இந்தியா
14 ஏப்,2026 - 12:05Report Abuse
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் தெலுங்கு வழி வந்தவர்கள் தான் அர்ச்சனை அபிஷேகம் இன்று வரை செய்து கொண்டு இருக்கிறார் என்று பக்தர்கள் கூறுகின்றனர். 0
0
N Sasikumar Yadhav - ,
14 ஏப்,2026 - 13:29Report Abuse
உன்னய மாதிரியான தேசதுரோக கும்பலுங்களைதான் பிடிக்காது . தமிழ் தமிழர்கள் பிரதமருக்கு பிடித்தமானது . உன்னய மாதிரியான போலி தமிழர்களைதான் இங்கு யாருக்கும் பிடிக்காது 0
0
vivek - ,
14 ஏப்,2026 - 13:41Report Abuse
அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் கூறுகிறார்கள் எல்லாம் இருக்கட்டும் ...வாடகை வாய் சிவநாயகம் என்ன கூற வருகிறான் 0
0
Reply
மேலும்
-
கூப்பனை நம்பி இருக்கிறார் ஸ்டாலின்: பாமக தலைவர் அன்புமணி காட்டம்
-
உதயநிதி மீது தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., அவதுாறு புகார்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
Advertisement
Advertisement