இளம்பெண் மாயம்: போலீஸ் விசாரணை

விழுப்புரம்: இளம்பெண் காணாமல் போனது குறித்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த மரகதபுரத்தைச் சேர்ந்தவர் பழனிவேலு மகள் திவ்யா, 22; பிளஸ் 2 வரை படித்துவிட்டு, விழுப்புரத்தில் உள்ள தனியார் கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement