இந்திய பத்திர சந்தைக்கு 'செக்' வைக்கும் பணவீக்கம்

ச ர்வதேச பணவீக்க அச்சம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்திய பத்திர சந்தை தற்போதைக்கு அழுத்தமான சூழலையே சந்திக்கும் என, 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

முக்கிய அம்சங்கள்  கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரை தாண்டியுள்ளதால், உலகளாவிய பணவீக்கம் அதிகரித்துள்ளது

 அமெரிக்காவின் 10 ஆண்டு கால பத்திரங்களுக்கான வட்டி 4.45 - 4.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜப்பானிலும் பல பத்தாண்டுகளில் இல்லாத உயர்வு காணப்படுகிறது. இது இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது

 பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ஆர்.பி.ஐ., தனது 'ரெப்போ' வட்டி விகிதத்தை 5.25 சதவீதம் என்ற அளவில் மாற்றமில்லாமல் வைத்துள்ளது

* இந்தியாவின் 10 ஆண்டு கால அரசுப் பத்திரங்களின் வட்டி 7.14 சதவீதமாக அதிகரித்துள்ளது
* வங்கிகள் தங்களின் 'முதலீட்டு ஏற்ற இறக்க இருப்பு' நிதியை இனி தங்களின் முக்கிய மூலதனமாக மாற்றிக் கொள்ள ஆர்.பி.ஐ., அனுமதித்துள்ளது. இது வங்கிகளின் நிதி நிலையை வலுப்படுத்த உதவும்

 சந்தையில் அவ்வப்போது சிறிய முன்னேற்றங்கள் தெரிந்தாலும், அவை தற்காலிகமானவையே. பணவீக்கம் மற்றும் உலகளாவிய சூழலில் தெளிவு பிறக்கும் வரை, பத்திர முதலீடுகளில் எச்சரிக்கையான போக்கே நீடிக்கும்.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

Advertisement