மேற்காசிய போர் எதிரொலி நகை ஏற்றுமதி கடும் சரிவு

மும்பை: மேற்காசிய போர் காரணமாக, இந்தியாவின் ரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, கடந்த மார்ச் மாதத்தில் 35 சதவீதம் சரிந்துள்ளது. ரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி சரிந்தாலும், ஆபரண தொழிலுக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி 17 சதவீதம் அதிகரித்து 21,483 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் வைரங்கள் மற்றும் தங்கத்தை வர்த்தகர்கள் முன்கூட்டியே கையிருப்பு வைப்பதே இதற்கு காரணமாகும்.

கடந்த மாதம் பட்டை தீட்டிய வைரங்களின் ஏற்றுமதி 27 சதவீதமும்; தங்க நகை ஏற்றுமதி 48 சதவீதமும் சரிந்த நிலையில், வெள்ளி நகை ஏற்றுமதி மட்டும் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.
Latest Tamil News

Advertisement