முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு: பிரேமலதா பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி

56


சேலம்: தமிழ்நாடு முழுக்க ஒரே குற்றச்சாட்டு தான் அண்ணன் மேல இருக்கு, எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை; போதை கலாசாரம் என திமுக பிரசார கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா வெளிப்படையாக பேசியதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சேலம் திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது: தமிழ்நாடு முழுக்க ஒரே குற்றச்சாட்டு தான் அண்ணன் மேல இருக்கு. அதுவும் இந்த பெண்கள் கூட்டத்தில் நான் சொல்கிறேன். எங்கே பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை; போதை கலாசாரம் இருக்கு. இதைத்தவிர வேறு என்ன சொல்ல முடியும்? இந்த ஆட்சியின் மீது வேறு ஒன்றும் சொல்ல முடியாது. நான் சொல்கிறேன், இன்றைக்கு சகோதரியாக இந்த கூட்டணியில் அண்ணனுக்கு வலது கரமாக இணைந்து இருக்கிறேன்.

ஜான்சி ராணியாக….!




அப்படி எங்கேயாவது பெண்களுக்கு ஏதாவது என்றால் அண்ணனிடம் உரிமையாக பேசுவேன். எல்லா இடங்களிலும் சிசிடிவி, பெண்களுக்கான உரிமையும் பாதுகாக்கும் சூழலை நிச்சயம் அண்ணன் உருவாக்குவார் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் தேவையில்லை. பெண்கள் என்றாலே சக்திக்கு இணையானவர்கள்.


ஓட்டுமொத்த சக்திகளே இன்றைக்கு ஒன்று இணைந்து இருக்கிறோம். நாம் அனைவரும் இணைந்து சக்திகளாக நமது தமிழகத்தையும், திராவிட பாரம்பரியத்தையும் காக்க வேண்டிய தருணம். தமிழகத்திற்கு எதாவது சின்ன பிரச்னை ஏற்பட்டால் நாம் எல்லோரும் ஜான்சி ராணியாக மாறுவோம்.


@twitter@https://x.com/dinamalarweb/status/2044656094262546591?s=20twitter

வீட்டில் துர்கா!




வேலு நாச்சியாராக மாறுவோம். தமிழத்திற்கு அச்சுறுத்தல் வந்தால் ஒட்டுமொத்த பெண்கள் சக்தியும் ஒன்று திரண்டு அண்ணனுக்கும், இந்த ஆட்சிக்கும் துணை நிற்போம். பெண் சக்தி ஒன்று திரண்டால் இந்த உலகமே நினைத்தாலும் அவரை எதிர்க்க யாரும் முடியாது. வீட்டில் அவரை பாதுகாப்பதற்கு அண்ணி துர்கா இருக்கிறார்.


தமிழகம் முழுவதும் துர்காக்களாக, அம்மன்களாக, சக்திகளாக தாய் குலங்கள் நீங்கள் இருக்கிறீர்கள். அதனால் சொல்கிறேன். அவருக்கு எதுவும் வராது. அவரது ஆட்சிக்கும் எதுவும் வராது. நிச்சயம் சொல்கிறேன். இந்த ஆட்சி மீண்டும் மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு பிரேமலதா பேசினார்.
கூட்டணிக் கட்சிகளின் கூட்டுப் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கூடியிருந்த கூட்டத்தில் இவ்வாறு பிரேமலதா பேசியது, திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. பிரேமலதா வாய் தவறி பேசினார் என்றும், வேண்டுமென்றே பேசினார் என்றும், அரசியல் கட்சியினர் இணையத்தில் கேலி, கிண்டலாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement