தமிழக லோக்சபா தொகுதிகள் 31 ஆகிவிடும் என்கிறார் உதயநிதி

34

நாகர்கோவில்: ''பிரதமர் மோடியை எதிர்த்து பேசும் ஒரே முதல்வர், ஸ்டாலின் மட்டும் தான்,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்-.

நாகர்கோவிலில், தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த உதயநிதி பேசியதாவது: தமிழகம் முழுதும் ஐந்தாண்டுகளில் எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறோம். மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி, 2,000 ரூபாய் தருவோம் என வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்.

மீண்டும் ஆட்சியமைத்ததும், அனைத்து மகளிர் கைகளிலும் 8,000 ரூபாய் கூப்பன் கொடுத்து விடுவோம். அவர்கள், வீட்டுக்கு என்ன மின்சாதனப் பொருட்கள் தேவையோ அதை வாங்கிக்கலாம்.

கடந்த ஐந்தாண்டுகளில், மத்திய பா.ஜ., அரசு, தமிழகத்துக்கு ஏதாவது நிதி ஒதுக்கி இருக்கிறார்களா. எந்த நிதியும் கிடையாது. நமக்கு வரவேண்டிய கல்வி நிதியை இன்னும் கொடுக்கவில்லை.

தொகுதி மறு சீரமைப்புவாயிலாக, தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளை 31 ஆக குறைக்க முயற்சி நடக்கிறது. தமிழக உரிமைகளை பறிக்கும் மற்றொரு செயலை பா.ஜ., செய்து கொண்டு இருக்கிறது. அதை நாம் கடுமையாக எதிர்ப்போம். பிரதமர் மோடியை எதிர்த்து பேசும் ஒரே முதல்வர், ஸ்டாலின் மட்டும் தான். இவ்வாறு பேசினார்.

Advertisement