சட்டக்கல்வி; எட்டாத வாக்குறுதிகள்
சட்டம் மற்றும் நீதித்துறை சார்பில், புதிய சட்ட பட்டதாரிகளுக்கு தன்னார்வ பயிற்சி திட்டம் தொடங்கப்படும். மாதம் 20,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்பது உட்பட, சட்டசபையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
அவற்றின் விவரம்:
* திருச்சி, கோவை, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லுாரிகளில், அதிகவேக இணைய வசதிகளுடன், 'வைபை' மண்டலம் உருவாக்கப்படும்
* தமிழகத்தில் உள்ள 14 அரசு சட்டக் கல்லுாரிகளில், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, சர்வதேச பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், சட்ட மாநாடுகள் ஆண்டுதோறும் நடத்தப்படும்
* அரசு சட்டக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கில திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்
* அரசு சட்டக்கல்லுாரி உதவிப் பேராசிரியர்களுக்கு, ஆசிரியர் மேம்பாட்டு திட்டம் மற்றும் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்
* திருச்சி, கோவை, திருநெல்வேலி, வேலுார் அரசு சட்டக் கல்லுாரிகளில், உள் விளையாட்டு திடல் மற்றும் உடற்பயிற்சி கூடம் நிறுவப்படும்
* இளங்கலை சட்டப்படிப்புகளில், தேசிய மாணவர் படை திட்ட பாடம் அறிமுகப்படுத்தப்படும்
* தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில், சைபர் ஸ்பேஸ், சட்டம் மற்றும் நீதி என்ற புதிய பாடப்பிரிவில் முதுகலை சட்டப்படிப்பு ஆரம்பிக்கப்படும்
* தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையின் கீழ் செயல்படும் சட்ட ஆராய்ச்சி துறையின் திறனை, சர்வதேச அளவில் மேம்படுத்தும் திட்டம் 15 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்படும்
* சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி, புதுப்பாக்கம், செங்கல்பட்டு, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லுாரிகளில், கூடுதலாக முதுநிலை பட்டப்படிப்பு பிரிவுகள் ஆரம்பிக்கப்படும்
* திருநெல்வேலி, வேலுார் அரசு சட்டக் கல்லுாரிகளில், 14 கோடி ரூபாயில், புதிதாக நுாலக கட்டடம் கட்டப்படும்
* புதிய சட்ட பட்டதாரிகளுக்கு, தன்னார்வ பயிற்சி திட்டம் தொடங்கப்படும். மாதம் 20,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்
* அரசு சட்டக் கல்லுாரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கு, ஆசிரியர் மேம்பாட்டு திட்ட பயிற்சி வழங்கப்படும்
* அரசு சட்டக் கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், அனைத்து சட்ட பாடப் புத்தகங்களும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ்நாடு பாடநுால் கழகம் வாயிலாக வினியோகிக்கப்படும்
* அரசு சட்டக் கல்லுாரி மாணவர்கள், சட்டக் கல்வியில் தகவல் தேடல் மற்றும் குறிப்பு ஆதாரங்கள் அணுகுதலை எளிமையாக்குவதற்காக, ஒரு கோடி ரூபாய் செலவில், அனைத்து அரசு சட்டக் கல்லுாரிகளிலும் மின் நுாலகம் அமைக்கப்படும்
* சட்டத்துறை நுாலகத்தில், தகவல் தேடல் மற்றும் குறிப்பு ஆதாரங்கள் அணுகுதலை எளிமையாக்க, மின் நுாலகம் அமைக்கப்படும்
* வணிக வழக்குகளை விசாரிக்க, ஏழு வணிக நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
செய்வாங்க செய்வாங்க சொல்லாதது சொல்ல முடியாதது எல்லாம் செய்வாங்க. இதுக்கே அவசரபட்டா எப்படி அதெல்லாம் காலாவதி ஆன உருட்ஸ் இந்த தேர்தல் புதிய உருட்டுகளை பாருங்கள்
பொய் சொல்ல மட்டுமே பயிற்சி கொடுப்பதால் இவர்களால் நீதித்துறைக்கு ஒரு பயனும் இல்லை.
Convert All People into Advocates
எல்லாம் செய்தாலும், நாங்கள் வடக்கன் வக்கீல்களை கோடி ரூபாய் பீஸ் கொடுத்து தான் அரசின் சார்பில், கட்சி சார்பில், மந்திரிகள் சார்பில் ஆஜர் ஆக வைப்போம். இவர்களை
கோட் சரவணன், தமிழன் பிரசன்னா,
R S பாரதி போன்ற வாய்தா வக்கீல்கள் ஆகத் தான் வைத்து இருப்போம்
இது அரசின் கொள்கை கொள்ளை
முடிவு.