விளையாட்டு விழா பரிசளிப்பு

புதுச்சேரி: பெத்துச்செட்டிபேட்டை பண்டிட் துரைசாமி அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆண்டு விளையாட்டு விழா மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

தலையைாசிரியர் உஷா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் தண்டபாணி பங்கேற்று, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் 5 இடங்களை பிடித்த மாணவர்கள், மற்றும் பாட வாரியாக முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்கி பாராட்டினார்.

விழா ஏற்பாடுகளை, உடற்கல்வி ஆசிரியர் நாராயணன், ஆதிகேசவன் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement