கோவை வந்த சிதம்பரத்தை சந்திக்காமல் வேட்பாளர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு
கோவை: கோவை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தை, காங் வேட்பாளர்கள் சந்திக்கவில்லை.
கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிங்காநல்லூர் தொகுதியில் ஸ்ரீநிதி, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சூரிய பிரகாஷ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங். மூத்த தலைவருமான சிதம்பரம் நேற்று மதியம் கோவை விமான நிலையம் வந்தார். மாலை கோவை தெற்கு மற்றும் சூலூர் தொகுதிகளில் பிரசாரம் செய்தார். இரவு ஈரோட்டில் பிரசாரம் செய்தார். ஆனால் கோவையில் காங். போட்டியிடும் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை.
தி.மு.க. சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பு என்பதாலும், கோவையில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கவில்லை என்பதாலும் அவர் பிரசாரம் செய்யவில்லை என்றனர் கட்சியினர். மறுபக்கம் கோவை வந்த சிதம்பரத்தை காங். வேட்பாளர்கள் இருவரும் கூட மரியாதை நிமித்தமாக சந்திக்காமல் புறக்கணித்தனர். இதனால் அக்கட்சியின் உள்கட்சி விரிசல் மேலும் அதிகரித்துள்ளது.
காங். நிர்வாகிகள் கூறுகையில், "கோவை வந்த சிதம்பரத்தை விமானநிலையத்திலும் வரவேற்கவில்லை. ஓட்டலில் மதியம் 3 முதல் 4.30 மணி வரை தங்கியிருந்தும் சந்திக்கவில்லை. 2 வேட்பாளர்களும் இளைஞர்கள். சிதம்பரம் மூத்த தலைவர். இந்த கூட்டணி உருவாக காரணமே அவர் தான். வேட்பாளர்கள் அவரை சென்று சந்தித்திருந்தால் பிரச்னை முடிந்திருக்கும். இது தவறான போக்கு.
சிதம்பரம் நாளையும்(இன்றும்) கோவையில் உள்ளார். அவர் இங்கிருந்து புறப்படுவதற்குள் வேட்பாளர் சந்தித்தால், வேட்பாளர்கள் மீது அதிருப்தியில் உள்ள சீனியர்கள் தேர்தல் பணி செய்ய வாய்ப்புள்ளது. இல்லையென்றால் பிரச்னை தொடரவே வாய்ப்புகள் அதிகம்" என்றனர்.
வாசகர் கருத்து (30)
ganesan - ,இந்தியா
15 ஏப்,2026 - 17:08 Report Abuse
தலைவர் ராகுல் காந்தி ஆரியர் வருவாரா 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
15 ஏப்,2026 - 14:40 Report Abuse
வாக்கியபடிவு தினம் வரைக்கும் தங்கினால் கூட ஒருபயலும் எட்டிக்கூட பார்க்கமாட்டான் . அதுபோக உங்க வெதலைப்பொ ட்டி செல்லாபெரும்தொகை ஏன் எந்த தொகுதி பரப்புரைக்கு வருவதில்லை ? லாக் ஆயிட்டாரா ? 0
0
Reply
Venkatesan Srinivasan - Hosur,இந்தியா
15 ஏப்,2026 - 14:33 Report Abuse
தீயாரைக் காண்பதும் தீதே 0
0
Reply
Venkateswaran V - Periyakulam,இந்தியா
15 ஏப்,2026 - 14:25 Report Abuse
ஒரு காலத்தில் பல வங்கி எ டீ எம் திறந்து வைப்பதற்காக தமிழகம் அடிக்கடி வந்தவர். காலம் மாறி போய்விட்டது. எ டீ எம் திறந்து வைத்ததுதான் அவர் தமிழகத்திற்கு செய்தது வேறு ஒன்றும் இல்லை. . 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
15 ஏப்,2026 - 13:18 Report Abuse
இனி அவ்வளவேதான் மரியாதை அவருக்கு. 0
0
Reply
VIDYASAGAR SHENOY - coimbatore,இந்தியா
15 ஏப்,2026 - 12:11 Report Abuse
அது ஒரு கட்சி காமடியான்ஸ் கூடாரம். 0
0
Reply
kskmet - bangalore,இந்தியா
15 ஏப்,2026 - 12:04 Report Abuse
இருக்கும் அறிவிற்கும் தமிழ் ஆங்கில மொழி வளத்திற்கும் சட்ட நுணுக்கத்திற்கும் சிகரத்தை எட்ட வேண்டியவர் சகதியில்விழுந்து மரியாதை இழந்து , ஊழலில் உழன்று கட்சி வேட்பார்களே அந்த மனிதரை பார்க்கவில்லையே என்ற ஏக்க நிலைக்கு நகர்ந்திருப்பது மிகவும் வேதனையான விஷயம். 0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
15 ஏப்,2026 - 11:54 Report Abuse
உனக்கெல்லாம் இந்த மானம் கெட்ட பொழப்பு தேவையா பணத்தை வைத்து கொண்டு என்ன செய்ய போகிறாய் இருக்கும்போது சமூகத்திற்கு நல்லது செய்து விட்டு போ பணம்தான் வேண்டும் என்றால் சொன்ன தொழிலை செய்யலாம் 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
15 ஏப்,2026 - 11:16 Report Abuse
மதிக்கும்படியாக நடந்துகொண்டாரா ???? 0
0
Reply
ABDUL MALIK - Manqaf,இந்தியா
15 ஏப்,2026 - 11:00 Report Abuse
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரை நட்சத்திர பேச்சாளராக காரைக்குடியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்., எனவே அவரின் கருத்து, தமிழகம் எங்கும் உள்ள காங்கிரஸ் தேர்தல் பரப்புரைக்கு பொருந்தும்.
வெளியூரை சேந்த சீமானுக்கு காரைக்குடி வாக்காளர்கள் வாக்களிக்க கூடாது என அவர் பரப்புரை செய்கிறார். அவரின் இந்த வாதம் சரி எனில், காஞ்சிபுரத்தை சேர்ந்த விஸ்வநாதனை மேலூரில் வேட்பாளராக நிறுத்தியது தவறு என்பதையும், ஆல்வார்ப்பேட்டையில் குடியிருக்கும் ஸ்டாலின் கொளத்தூரில் போட்டி இடுவதையும்,
மதுரையை சேர்ந்த திருமாறன், திருப்பத்தூரில் போட்டியிடுவதையும், டெல்லியில் குடியிருக்கும் சோனியா காந்தியும் அவரின் மகன் மற்றும் மகள் உ பி மற்றும் கேரளாவில் போட்டி இற்று வென்றதையும் விமர்ச்சிக்க வேண்டும்.
முடியவில்லை என்றால் சீமானுக்கு காரைக்குடியில் வாக்கு சேகரிக்க வேண்டும்.
இவரின் தந்தை மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது, எவர் என்ன செய்து கொண்டிருந்தார்? சீமன்க்கும் வாக்களிக்க வேண்டாம் என்று கூற ஆயிரம் காரணங்கள் உண்டு.
அனால் அவர் காரைக்குடியில் குடியிருக்க வில்லை என்று கூறுவது அரசியல் சாசன விதிகளுக்கு முரணானது. பாராளுமன்ற உறுப்பினருக்கு இது தெரியவில்லை என்றால், தயவு செய்து மீண்டும் ஒருமுறை பள்ளிக்கூடம் சென்று படித்து விட்டு வரவும். 0
0
Reply
மேலும் 20 கருத்துக்கள்...
மேலும்
-
தவற விட்ட பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
-
செய்யூர், திருப்போரூரில் ஓட்டுக்கு ரூ.500 வினியோகம்
-
இன்று இனிதாக ... (23.04.2026) காஞ்சிபுரம்
-
கிரைம் கார்னர்:சென்னை
-
நாட்டின் முதல் 'ஒமேகா கால்பந்து' சென்னை நியூ கல்லுாரி 'சாம்பியன்' ஒரே நேரத்தில் 3 அணிகள் களமிறங்கி விளையாடும்
-
மாவட்டத்தில் 2,687 மாற்றுத்திறனாளிகள் முதியோரின் தபால் ஓட்டு பதிவு
Advertisement
Advertisement