செய்யூர், திருப்போரூரில் ஓட்டுக்கு ரூ.500 வினியோகம்

செய்யூர், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில், அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிக்கு நடுவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் வினியோகித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்யூர் தொகுதியில், அ.தி.மு.க., மற்றும் வி.சி.க., சார்பில், தலா 1,000 ரூபாயும், திருப்போரூர் தொகுதியில், பா.ம.க., மற்றும் வி.சி.க., சார்பில், தலா 500 ரூபாயும் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement