அம்பேத்கர் பிறந்தநாள் விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அரசு ஊழியர் ஐக்கிய பேரவை அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் தலைவர் கண்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், வன்கொடுமை தடுப்புச்சட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர் சக்திவேல் அம்பத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காந்தி மன்ற இயக்க மாநி செயலாளர் ஜெயசீலன் பங்கேற்றார்.

நத்தம் : -நத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மூன்றுலாந்தர் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட துணை செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் மயில்ராஜ் கலந்து கொண்டனர்.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தொகுதி தலைவர் சுப்பிரமணி, தமிழ் புலிகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சங்கத்தமிழன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டது.

வேடசந்துார் : விடுதலை சிறுத்தைகள் சார்பில் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், பொருளாளர் ராமகிருஷ்ணன், துணை செயலாளர்கள் முத்துக்கணேசன், திருமாமணி பங்கேற்றனர்.

Advertisement