தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு

1

சென்னை: சென்னை திரு.வி.க., நகர் அ.தி.மு.க., வேட்பாளர் பொற்கொடி, தேர்தல் கமிஷனில் அளித்துள்ள புகார்:

சென்னை, திரு.வி.க., நகர் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறேன். என் கணவர் ஆம்ஸ்ட்ராங்கை, ஆட்களை ஏவி விட்டு, இந்த தொகுதியில் கொலை செய்தனர்.

அதேபோல, எனக்கு எதிராகவும் ஆட்களை ஏவி விடுகின்றனர். ஆளும்கட்சி அமைச்சர் பிரச்னை செய்கிறார்; பிரசாரத்திற்கும் இடையூறு செய்தார். எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுக்கின்றனர்.

அவர்களால், எனக்கும், என் குழந்தையின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வெளி மாநில ஆட்களை வரவழைத்து, பூத்களை கைப்பற்ற சதி நடக்கிறது.

எனவே, போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுள்ளேன். தி.மு.க.,வினரே அராஜகம் செய்கின்றனர். ஆனால், என் மீது பொய்யான புகாரை அளித்து உள்ளனர். இவ்வாறு பொற்கொடி கூறினார்.

Advertisement