நிப்டி 24,000 புள்ளிகளை தாண்டியது 10 லட்சம் கோடி ரூபாய் லாபம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, இந்திய பங்கு சந்தைகள், நேற்று கணிசமான உயர்வை சந்தித்தன. கடந்த திங்கட்கிழமை சரிவை கண்டிருந்த சந்தையில், நேற்று காளையின் ஆதிக்கம் மேலோங்கியதால், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 9.41 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. ஒரு நாள் சரிவு, ஒரு நாள் ஏற்றம் என்ற வகையில் இருப்பதால், முதலீட்டாளர்கள் குறுகியகால அடிப்படையில் பங்குகளை வாங்கி விற்க ஏற்றதாக, சமீப நாட்களாக பங்கு சந்தைகளின் போக்கு அமைந்துள்ளது என்கிறார்கள் நிபுணர்கள். நேற்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 1,263 புள்ளிகள் உயர்ந்து 78,111 என்ற அளவிலும், நிப்டி 388 புள்ளிகள் அதிகரித்து 24,231 என்ற அளவிலும் நிலைபெற்றன.
ஏற்றத்துக்கான காரணங்கள்

* பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழ் சென்றது
* ஆசிய, அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டது
* சந்தை அபாயத்தை குறிக்கும் இந்தியா வி.ஐ.எக்ஸ்., குறியீடு 10 சதவீதம் சரிந்தது
* அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஏற்றம் கண்டது
பங்குகளின் நிலை:
உயர்ந்த பங்குகள்: 3,585
சரிந்த பங்குகள்: 802
மாற்றமில்லாதவை: 126
சிறப்பாக செயல்பட்ட துறைகள்:
துறை உயர்வு(%)
சேவைகள் 3.30%
தொழில் துறை 2.90%
மின்சாரம் 2.87%
நுகர்வோர் சாதனங்கள் 2.84%
ஐ.டி., 2.78%
மூலதன பொருட்கள் 2.54%
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்; அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை
-
முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு: பிரேமலதா பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
Advertisement
Advertisement