12.5 பவுன் தங்கம் திருட்டு

தேனி: தேனி அருகே உப்பார்பட்டி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணப்பாண்டி 33. இவரது மனைவி ஜான்சிராணி. சரவணப்பாண்டி தனது தாயின் சிகிச்சைக்காக மனைவியுடன் ஏப்.9ல் மதுரை சென்றார்.

அப்போது இவரது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 12.5 பவுன் தங்க நகை, ஜிமிக்கியை திருடிச் சென்றனர். வீரபாண்டி போலீசார் கொள்ளையர்களை தேடுகின்றனர்.

Advertisement