180 சிறுமியரை சீரழித்த மஹா., இளைஞரின் வீடு இடிப்பு

10

மும்பை: மஹாராஷ்டிராவில் சமூக வலைதளம் மூலம் காதலிப்பதாக கூறி பழகி, 180 சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச படம் எடுத்து மிரட்டிய முகமது ஆயாஸ், 19, என்ற இளைஞரின் வீட்டை மாநில அரசு நேற்று இடித்தது.

மஹாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தின் பரத்வாடா என்ற இடத்தை சேர்ந்தவர் முகமது ஆயாஸ். இவர் சிறுமியருடன் இருக்கும் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளத்தில் பரவியது. இது தொடர்பாக, மாவட்ட எஸ்.பி.,க்கு பா.ஜ., - எம்.பி., ஒருவர் புகார் அளித்தார்.

இதையடுத்து, ஆயாஸை கடந்த 11ம் தேதி கைது செய்து அவரது மொபைல் போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஏராளமான சிறுமியருடன் ஆயாஸ் இருக்கும் ஆபாச படங்கள் காணப்பட்டன. விசாரணையில், 'ஸ்நாப்சாட்' மற்றும் 'வாட்ஸாப்' சமூக வலைதள குழுக்களை பயன்படுத்தி, சிறுமியரை தொடர்புகொண்டது தெரிந்தது.

அவர்களிடம் காதலிப்பதாக நடித்து நம்பிக்கையை ஏற்படுத்தி மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களுக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதை வீடியோ எடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபட சிலரை மிரட்டியுள்ளார். ஆயாஸின் ஆபாச படங்கள் வெளியானதும் சிக்கினார். இவர் அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் முன்னாள் நிர்வாகி என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆயாஸின் வீடு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, அப்பகுதி நகராட்சி ஊழியர்கள் புல்டோசர் உடன் வந்து ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த வீட்டின் படிக்கட்டுகள், ஜன்னல் கூரைகளை நேற்று இடித்தனர்.

Advertisement