ரூ.25.21 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்

தர்மபுரி: தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் தினசரி ஏலத்தில், தமிழ-கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான விவசாயிகள் பங்கேற்று வருகின்றனர். நேற்று, 64 விவசாயிகள் ஏலத்திற்கு வந்-தனர். அவர்கள், 105 குவியல்களாக, 4,032 கிலோ பட்டுக்கூடு-களை கொண்டு வந்திருந்தனர்.



இவை, 347 முதல், 731 ரூபாய் வரை சராசரியாக, 625 ரூபாய் என ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 25.21 லட்சம் ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த ஏலத்தால் அரசுக்கு, 37,816 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

Advertisement