ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கொண்டு செல்லும் பணி



காங்கேயம் :காங்கேயம் தொகுதியில், ஓட்டுப்பதிவு செய்யும் இயந்திரம் வைத்து எடுத்து செல்லும் பெட்டி தயார்ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் வரும், 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கேயம் தொகுதியில், 318 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் ஓட்டு செலுத்தும் இயந்திரங்களை அந்தந்த மையங்களுக்கு, பாதுகாப்பாக எடுத்து செல்ல வேண்டும். ஓட்டுச்சாவடிக்கு தேவையான இயந்திரம், மை உள்பட பல பொருட்களை கொண்டு செல்ல ஏதுவாக, பெட்டிகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்றது. இதில் தொகுதியில் உள்ள, பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக காங்கேயம் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன் தெரிவித்தார்.

Advertisement