மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல்
சோழதேவனஹள்ளி: நிழல் உலக தாதா பிஷ்னோய் ஆதரவாளர் என்று கூறி, மஹாராஷ்டிரா போக்குவரத்து துறை அதிகாரியை மிரட்டிய நபர் மீது வழக்குப்பதிவாகி உள் ளது.
மஹாராஷ்டிராவின் காஷிகான் வட்டார போக்குவரத்து துறையில் அதிகாரியாக பணி செய்பவர் பிரசாத் சிவதாஸ் நல்வாடே. பெங்களூரின் சோழதேவனஹள்ளியில் நடந்த அகில இந்திய மோட்டார் பாதுகாப்பு தொழில்நுட்ப நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாலை பாதுகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவரது மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், 'நிழல் உலக தாதா பிஷ்னோய் ஆதரவாளர்' என்று கூறினார். 'நீங்கள் ஏழை ஆட்டோ டிரைவர்களை தொந்தரவு செய்கிறீர்கள். இப்படி செய்தால் உங்களை சும்மா விட மாட்டோம்' என்று மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்தார்.
மஹாராஷ்டிரா திரும்பிய பிரசாத், காஷிகான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மர்மநபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்கை, சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு மாற்றி உள்ளனர்.
மேலும்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
-
தி.மு.க, ஆட்சியில் விவசாயிகள் தொடர் பாதிப்பு: ஸ்ரீதர் வாண்டையார் குற்றச்சாட்டு
-
தி.மு.க., வேட்பாளர் கணேசன் ஓட்டு சேகரிப்பு