வேதகிரீஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசித்து, பலன்கள் கூறினர்.

தமிழரின் முக்கிய பண்டிகைகளில், தமிழ் புத்தாண்டு துவக்க நாள் குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டின் முக்கிய பலன்கள், நிகழ்வுகள் ஆகியவை குறித்து, ஆண்டின் துவக்க நாளில், கோவில்களில் பஞ்சாங்கம் வாசித்து தெரிவிக்கப்படும்.

பராபவ ஆண்டு துவக்க நாளான நேற்று முன்தினம் இரவு, திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், பக்தர்களுக்கு அட்சதை வழங்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கம் வாசித்து, ஆண்டின் பொதுப்பலன், மக்கள்நலன், விவசாயம், மழைப்பொழிவு உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.

Advertisement